எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 4 - கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறார். தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறி இருக்கிறது. இந்த அணுமின் நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு கொண்டது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே போராட்டம் நடத்துபவர்கள் இதை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பணம் செலவு செய்வதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி நடந்த விசாரணையில், வாகனங்களில் மக்களை அழைத்து வருவது, உணவு வழங்குவது போன்றவற்றுக்காக ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த பணம் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுவதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 12 தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. கணக்கு தணிக்கையின்போது 6 அமைப்புகளின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதில் 3 நிறுவனங்கள் பணத்தை முறைகேடாக செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 3 நிறுவனங்கள் மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளை சி.பி.ஐ.யும், 2 வழக்குகளை தமிழக அரசும் பதிவு செய்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் அணு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் அணு உலை மூலம் தயாராகிறது. சீனாவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பிரான்சில் 68 சதவீதமும், ஜப்பானில் 26 சதவீதமும், ரஷ்யாவில் 20 சதவீதமும், தென்கொரியாவில் 10 சதவீதமும் அணு உலை மூலம்தான் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 20 அணுமின் உலைகள் உள்ளன. இதில் 19 உலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் 4 ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவீதம்தான். பாகிஸ்தானில் சீனா உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா, அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. சூரிய ஒளி மூலம் 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க 16 ரூபாய் செலவாகிறது. அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்க 3 ரூபாய் 60 காசும், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க 6 ரூபாயும் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் தயாரிக்க 2 ரூபாய் 45 காசுதான் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் பாதுகாப்பானது. குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டுக்கு அணு மின்சாரம் மிகவும் அவசியம் என்று எடுத்துக் கூறியபோதும் உள்நோக்கத்துடன் நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியவர்கள் மீது 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் பிரச்சினை. இதில் மத்திய அரசு தலையிடாது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறிப்பு பற்றி மத்தியமாநில அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் படத்தொடங்கும். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுற்றுலா விசாவுடன் தமிழ் நாட்டுக்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்தது. அவர் கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அவருடைய லேப்டாப் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது லேப்டாப்பில் கூடங்குளம் அணுஉலை படம் இருந்தது. மேலும் தேவைப்பட்டால் அவரை அழைத்து வந்து விசாரிப்போம். போராட்டம் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையும் இதுதான். நானும் மத்திய மந்திரி ஜி.கே. வாசனும் இதுபற்றி பிரதமரிடம் கூறி இருக்கிறோம். இலங்கையில் மட்டும் அல்ல உலகில் எந்த பகுதியில் மனித உரிமை மீறப்பட்டாலும் மத்திய அரசு அதை எதிர்க்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடன் இருந்தார். அவரும் இதே கருத்தை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.