எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை.- 23 - நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்த ஜனாதிபதி தேர்தல் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் நிதி அமைச்சரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இவர் வரும் 25ம் தேதி பதவியயேற்கிறார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி நேற்று அவர் விடைபெற்றுக்கொண்டார். நாட்டின் அடுத்த புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் கூட்டணியில் இல்லாத முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் , ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, இடது கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மா போட்டியிட்டார். இந்த தேர்தலில் 776 எம்.பி.க்களும் 4,120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட்டனர். ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 11 லட்சம். இதில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின. அதாவது 8 லட்சம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்திலும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களிலும் நடந்த இந்த தேர்தலில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிறகு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மையத்திற்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணிக்கை பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மா ஆகியோரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நேற்று காலை தொடங்கியது. முதலில் பாராளுமன்ற வளாகத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மாநிலங்களின் சட்டமன்ற வளாகங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டிகள் பிரணாப் மற்றும் சங்மா ஆகியோரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டன. இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்ட ஓட்டு செல்லாது என்று ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின்படி பிரணாப் முகர்ஜிக்கு 527 எம்.பி.க்களும், சங்மாவுக்கு 206 எம்.பி.க்களின் ஓட்டுக்களும் கிடைத்தன. மாநிலவாரியாக பிரணாப் முகர்ஜிக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் சங்மாவிற்கு கூடுதலாக ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால் கர்நாடகத்திலும் ஜார்கண்ட்டிலும் சில எம்.எல்.ஏ.க்கள் பிரணாப்பிற்கு வாக்களித்துவிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில் பிரணாப் முகர்ஜிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததை அடுத்து அவர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜிக்கு 7 லட்சத்து 13 ஆயிரத்து 763 வாக்குகள் கிடைத்துள்ளன. சங்மாவுக்கு 3 லட்சத்து 15 ஆயிரத்து 987 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து முகர்ஜி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி அறிவித்தார்.
இதை அடுத்து வருகிற 25 ம் தேதி நாட்டின் 14 வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டிலுக்கு வழி அனுப்பும் விழாவும் நடைபெற உள்ளது. பிரணாப்பின் வெற்றியை தொடர்ந்து டெல்லி மாநகரம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரணாப் முகர்ஜிக்கு தற்போது 76 வயது ஆகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்த பிரணாப் மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தவர்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜிக்கு அம்மாநில மக்கள் வாழ்த்த தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படடது இதுவே முதல் முறையாகும்.
பிரணாப் முகர்ஜிக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 19 hours ago |
மினி பான் கேக்1 week 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது
07 May 2024சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.