எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம், ஜூலை. 28 - இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியதால் மீனவர்கள் 23 பேரையும் நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ம் தேதி படகுகளில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மோட்சம், செல்லதுரை, முருகன், ஜஸ்டின் ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் படகில் இருந்த மீனவர்கள் ராஜூ, சூலியான்ஸ், விவால்டன், எஸ்ரோம், கிறிஸ்டோபர், பாலமுருகன், மாரி, பஞ்சவர்ணம், முருகன், சுப்பிரமணி, முருகேசன், திருமுருகன், முனியசாமி, மாயமுருகன், நம்புராஜன், முத்துமாணிக்கம், அண்ணாமலை, முருகன், அந்தோணி சிலுவை, கருப்பையா, நசீர், கோவிந்தன் உள்ளிட்ட 23 பேரையும் கைது செய்து தலைமன்னார் போலீசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இதன் பின்னர் கடந்த 22 ம் தேதி மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மீனவர்களை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை தொடர்ந்து வலியுறுத்தியும், கடிதமும் எழுதினார். அதன்படி மீனவர்களை விடுதலை செய்யும்படி மத்திய அரசு இலங்கை அரசை கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் நேற்று மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்ற நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டார். இம்மீனவர்கள் 5 படகுடன் ஓரிரு தினங்களில் இந்திய கடலோர காவல் படை மூலம் பாதுகாப்புடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்ப உள்ளதாகவும், மீனவர்கள் 23 பேரும் வெகு விரைவில் விடுதலை செயப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவுதான் காரணம். அதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா முயற்சி வெற்றி:
முதல்வர் ஜெயலலிதா எடுத்த தொடர் முயற்சிகளை அடுத்து தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
21.7.2012 அன்று மீன்பிடிப்பதற்காக ஐந்து படகுகளில் புறப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்கள் இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 22.7.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சார்ந்த 23 மீனவர்களையும், 5 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தங்களது வாழ்வாதாரத்திற்காக இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களை சிறைபிடிக்கக் கூடாது என இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்துமாறு இலங்கை அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் 23.7.2012 நாளிட்ட கடிதத்தில் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டார்.
மேலும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு சிறையிடப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவினையடுத்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சிறை பிடிக்கப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து முயற்சி எடுத்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடனடி நடவடிக்கையினையடுத்து, 22.07.2012 அன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் மன்னார் குற்றவியல் நடுவர் திமன்றத்தால் நேற்று (27.7.2012) விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.