எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஏப்.- 5 - ஓட்டு எனும் ஆயுதம் மூலம் தி.மு.க. கூட்டணியை மக்கள் சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று திருப்பரங்குன்றத்தில் விஜயகாந்த் பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வேட்பாளர் ஏ.கே.டி. ராஜாவை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் அக்கட்சி நிறுவனர் விஜயகாந்த் பேசியதாவது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்கிய பின்னர் முதல் மாநாட்டை நடத்தினார். நானும் திருப்பரங்குன்றம் அருகே மாநாடு நடத்தி கட்சியை துவக்கினேன். அதனால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியை தே.மு.தி.க. விற்காக அ.தி.மு.கவிடம் கேட்டுப் பெற்றேன். முருகப் பெருமான் சூரனை தன் வேலால் வதம் செய்து தேவர்களை காப்பாற்றினார். அதைப் போன்று மக்களாகிய நீங்கள் ஓட்டு எனும் ஆயுதம் மூலம் ஏப்ரல் 13 ம் தேதி தி.மு.க. கூட்டணியினரை வதம் செய்து அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். என்னை மதுரைக்கு வர முடியுமா என அழகிரி கேட்கிறார். நான் மதுரையில் பிறந்தவன்தான். அழகிரிதான் வெளியூரில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார்.
எனது மானசீகமான குரு எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் தொடங்கிய அ.தி.மு.க.வுடன்கூட்டணி வைத்துள்ளேன். தமிழக மக்களையும், தமிழகத்தையும் கருணாநிதி குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்பதற்காகவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். கூட்டணியை நானாக முடிவு செய்யவில்லை. தொண்டர்களிடம் கேட்டு அவர்கள் விரும்பியதாலும், மக்கள் விரும்பியதாலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அன்று நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். இன்று நான் சொல்வதை நீங்கள் கேளுங்கள். தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கவே அளிக்காதீர்கள்.
ஊடகங்கள், லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டன. அதை தி.மு.க.வினர் குடும்ப தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை. மின்வெட்டு காரணமாக மக்கள் மரத்தடியில் காற்று வாங்கும் நிலை உருவாகி விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டன. அழகிரி தற்போது அழுதகிரியாகி விட்டார். நான் மதுரையில்தான் தங்குகிறேன். உங்கள் ஆட்களை கூட்டிக் கொண்டு வாருங்கள். பார்த்துக் கொள்வோம். நான் மதுரைக்காரன்தான். அழகிரிதான் கரையான் புற்றுக்குள் புகுந்த கருநாகம் போல் மதுரைக்கு வந்துள்ளார். ஓட்டுக்கள் மூலம் அவர்களை அடித்து விரட்ட வேண்டும். காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஈவு இரக்கம் பார்க்காதீர்கள். 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார் கருணாநிதி. அதை கொடுத்திருந்தாலாவது காய்கறி பயிரிட்டு விலைகளாவது குறைந்திருக்கும்.
மக்களை ஏமாற்றி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கின்றனர். கருணாநிதிக்கு எப்போதுமே திருட்டு புத்திதான். அலிபாபா 40 திருடன் என்ற படத்தில் எம்.ஜி.ஆர். திருடர்களிடம் இருந்து கொள்ளையிட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்வார். ஆனால் கருணாநிதியோ, நானூறு திருடர்களுடன் (குடும்பத்தினர்) உள்ளார். அந்த 400 திருடர்களும் மக்களிடம் கொள்ளையிட்டு கருணாநிதிக்கு கொடுக்கின்றனர். தேர்தலில் தோல்வி பயம் காரணமாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என கருணாநிதி புலம்புகிறார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்தே ஆக வேண்டும். கருணாநிதி தனது குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி பதவி வாங்குவதற்காக அடிக்கடி டெல்லி சென்றார். தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவர் டெல்லி சென்றது உண்டா?
கருணாநிதி தமிழின காவலர் அல்ல. தமிழினத்தை அழித்தவர். தமிழகத்தில் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. கருணாநிதி மாறி மாறி பேசுகிறார். குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால் அழகிரி ஏன் முன் ஜாமீன் வாங்குகிறார். அ.தி.மு.க. கூட்டணியை பிரிக்கவும், காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெறவும் கருணாநிதி அவரது மகன் அழகிரி நினைக்கின்றனர். அது நடக்காது. கலைஞரின் வீடா அல்லது தமிழ்நாடா என யோசித்து மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ