முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கொலை செய்தவரின் ஜாமீன் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா,ஏப்.16 - பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.ராஜ் கிஷோர் கேசரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த ஆசிரியை ரூபம் பதக்கின் ஜாமீன் மனுவை பாட்னா சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.  பீகார் மாநிலம் பூர்ணியா சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ் கிஷோர் கேசரி. இவர் தன்னுடைய சொந்த தொகுதியான பூர்ணியாவில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக்கொண்டியிருந்தார். அப்போது வரிசையில் மனுக்கொடுப்பதுபோல் வந்த ஒரு பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கேசரியை சரமாரியாக குத்திகொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி நடந்தது. கொலை செய்த அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது பெயர் ரூபம் பதக் என்றும் அவர் ஒரு ஆசிரியை என்றும் தெரியவந்தது. அந்த ஆசிரியை கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை எம்.எல்.ஏ. கேசரி ஆசைகாட்டி ஏமாற்றிவிட்டார் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை பாட்னாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தனக்கு ஜாமீன் வேண்டும் என்று ரூபம் பதக் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சி.பி.ஐ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே. மிஸ்ரா, ரூபத்திற்கு ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையொட்டி ரூபம் பதக்கின் ஜாமீன் மனுவை நீதிபதி கிருஷ்ண குமார் தள்ளுபடி செய்தார். பதக் மீது கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக நவ்லேஷ் பதக்கும் சேர்க்கப்பட்டுள்ளார். ரூபம் பதக்குடன் நவ்லேஷ் பதக்கும் பாட்னாவில் பலத்த பாதுகாப்பு உள்ள பியூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்