எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஜன.- 2 - திண்டுக்கல் மாவட்டத்தில் 11 லட்சத்து 8 ஆயிரத்து 256 உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு மெருன், சாம்பல் நிற அட்டை வழங்க எல்காட் நிறுவனம் மூலம் பணிகள் துவங்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் பதவியேற்றவுடன் உழவர் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள் அனைவருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை (டோக்கன்)வழங்க உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. தற்போது முழுவதுமாக மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு இம்மாவட்டத்தில் மட்டும் 11,08,256 தகுதி பெற்ற பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட 65 வயதிற்குட்பட்ட தகுதியானவர்களுக்கு நிரந்தர உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அட்டை வழங்குவதற்கு முன்பாக எல்காட் நிறுவனம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உள்ளவர்கள் விபரங்கள் கணிணி பதிவு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் பார்வையிட்டு பின்னர் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் அவர்கள் கருவறை முதல் கல்லறை வரை அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி இதுநாள் வரை திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக வழங்கப்பட்ட உழவர் அட்டை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயனடையும் பயனாளிகள் முழுமையாக கணக்கெடுக்கும் பணி முடிவடைந்துள்ளது. அதன்படி 11,08,256 பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு நிரந்தரமாக அட்டை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடும்பத் தலைவர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட 65 வயதிற்கு உட்பட்ட தகுதியானவர்களுக்கு மெருன் கலரிலும், இதர குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிற கலரிலும் அடையாள அட்டை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தவவிட்டுள்ளார். எனவே அவர்களைப் பற்றிய விபரங்கள் கணிணியில் ஏற்றி உழவர் பாதுகாப்பு அட்டை தயார் செய்வது முக்கியப் பணியாகும். இந்தப் பணியை எல்காட் நிறுவனம் ஏற்று உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளின் விபரங்களை பதிவு செய்யும் பணியை திண்டுக்கல் மாவட்ட எல்காட் மேலாளர் தியாகராஜன் தலைமையில் இப்பணி நடைபெற துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெறும். பிப்ரவரி மாதத்திற்குள் இந்தப்பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப்பணியில் ஈடுபட்டிருக்கும் எல்காட் நிறுவனம் குறித்த காலத்தில் முடித்து உழவர்களுக்கு அட்டைகள் வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரசீத் அலி, மாவட்ட எல்காட் மேலாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.