எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.30 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றிய சாலைகளை உடனடியாக மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.நேற்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.சோமசுந்தரம் கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-
வி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.) அனைத்து ஊராட்சி சாலைகளையும் தரம் உயர்த்தி அகலப்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?
ப:அமைச்சர் கே.பி.முனுசாமி:
தமிழகத்தில் உள்ள ஊராட்சி சாலைகளில் மாவட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலை மற்றும் ஊராட்சிகளை இணைக்கும் சாலைகள் என பிரிக்கப்பட்டு இவற்றில் ஆண்டு ஒதுக்கீடு மற்றும் சாலையின் முக்கியத்துவம் ஆகியற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட சாலைகள் மட்டுமே தரம் உயர்த்திட திட்டமிடப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் தேவைக்கேற்ப சாலைகள் 6.00 மீ வரை அகலப்படுத்தப்படுகின்றன. தற்போது ஊராட்சி சாலைகளை அகலப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் பேசியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா நெடுஞ்சாலைகளுக்கு இணையாக ஊராட்சி சாலைகள் மேம்படுத்தப்படும் என்ற நல்ல செய்தியினை அறிவித்திருக்கிறார். ஊராட்சி சாலைகளை எல்லாம் செப்பனிடப்படும் என்று மக்களெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வாய்ப்பை நிறைவேற்றித் தருவதற்கு அறிவித்திருக்கிற இந்த நல்ல வேளையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கிளாங்குளம், சாலையும், கவசக்கோட்டை சாலை கள்ளிக்குடியிலிருந்து சோளம்பட்டி செல்லக்கூடிய சாலை, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மேலக்கோட்டை சாஸ்திரிபுரம் செல்லக்கூடியச சாலை, ஊராட்சி ஒன்றிய சாலை மிகப்பெரிய போக்குவரத்து நிறைந்த சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. முதலமைச்சர் அறிவித்தவாறு, அமைச்சர் இந்த ஆண்டே அந்த ஊராட்சி சாலைகளைப் புதுப்பித்துத் தருவார்களா?
பதில்: அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் ஜெயலலிதா எப்போதுமே எதார்த்த நிலையிலேயும், உண்மை நிலையிலேயும் ஆட்சி செய்கின்றவர்கள். நான் சொன்னதாக ஒரு கருத்தை இங்கே சொன்னார்கள். நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றியச்சாலைகளை மேம்படுத்த வேண்டுமென்று சொன்னார். நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கென்று ஒரு தனி அளவுகோல் இருக்கின்றது.
ஊராட்சி ஒன்றியச்சாலைகளுக்கென்று ஒரு தனி அளவுகோல் இருக்கின்றது. எனவே, ஊராட்சி ஒன்றியச்சாலைகளுக்கென்று இருக்கின்ற அளவுகோல்களின் அடிப்படையில் அந்தச்சாலைகள் மேம்படுத்தப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர் கோரியுள்ள அவருடைய தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்து, எந்தெந்தச்சாலைகளை உனடியாக எடுத்துச்செய்ய வேண்டுமோ, அந்தச்சாலைகள் முழுவதும் உடனடியாக எடுத்துச்செய்யப்படும்.
எனென்று சொன்னால், இந்த நிதியாண்டிலேயே கிட்டத்தட்ட 9,235 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் 1,448 கோடி ரூபாய்ச்செலவில் மேம்படுத்தப்பட வேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அதனடிப்படையிலே மிகவும் பழுதுபட்ட சாலைகளை உடனடியாக எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையிலே உறுப்பினர் தொகுதியிலே உள்ள அந்தச்சாலைகைக் கண்டறிந்து. அவை எடுத்துக்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.