முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாத குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தாய்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

சண்டிகர்,ஜூலை.2 -  ஹரியானாவில் நான்கவதாக பெண் குழந்தை பிறந்ததால் எரிச்சல் அடைந்த தாய் அதை உயிருடன் புதைத்துள்ளார். ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் செய்யது சாப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் கரம் இலாஹி. அவரது மனைவி அஜ்மீரி காத்தூன்(30). அவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் காத்தூன் மீண்டும் கர்ப்பம் ஆனார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் அவர் மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிறந்த அந்த குழந்தைக்கு அஸ்மா என்று பெயர் வைத்தனர். ஆண் குழந்தையை எதிர்பார்த்த காத்தூன் அஸ்மாவின் பிறப்பால் எரிச்சல் அடைந்தார். இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை கணவர் வீட்டில் இல்லாதபோது குழந்தையை தனது அறையில் குழி தோண்டி உயிருடன் புதைத்தார். நல்ல வேளையாக குழந்தையை இலாஹியின் அண்ணனும், அவரது மனைவியும் சேர்ந்து குழியில் இருந்து உயிருடன் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து காத்தூனை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்