எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மே 8-
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இம்மாதம் 14 ம் தேதிவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை கனிமொழி தினமும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ம் தலைமுறையினருக்கான (2 ஜி.) தொழில்நுட்ப வசதியை அளிப்பதற்காக தொலைத் தொடர்புத் துறை சார்பில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்களை அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தான் வழங்கியுள்ளார். இந்த ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய கணக்கு தணிக்கைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்த இழப்புக்கு அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாதான் முழுப்பொறுப்பு என்றும் அந்த குழு குற்றம் சாட்டியுள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்று அமெரிக்க பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு இருந்தன. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரே ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆ.ராசா அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து ஆ.ராசாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் பிறகு ராசாவை கைது செய்து தங்கள் காவலில் எடுத்தனர். சி.பி.ஐ. காவல் முடிந்ததும் ஆ.ராசா டெல்லியில் உள்ள அதிக பாதுகாப்பு மிக்க திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதும் இவர் இதே சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் ஆ.ராசாவின் உதவியாளர்களான சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆ.ராசா உள்ளிட்ட இவர்கள் 9 பேரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயமடைந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டதாக கலைஞர் டி.வி. பிறகு தெரிவித்தது. இருந்தாலும் அந்த ரூ.214 கோடி பணம் கலைஞர் டி.வி.க்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பது மர்மமாகவே இருந்தது. இந்த கலைஞர் டி.வி.யில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் கடந்த ஏப்ரல் 25 ம் தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் கனிமொழி கூட்டுச் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து இவர்கள் இருவரையும் மே 6 ம் தேதி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இவர்கள் இருவரும் நேற்று முன்தினம்(மே 6) இந்த கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது கனிமொழி சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழி, சரத்குமார் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் வாத பிரதிவாதங்கள் முடிவடையாத நிலையில் இந்த விசாரணயை நீதிபதி ஷைனி நேற்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி நேற்றும் இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது கலைஞர் டி.வி.யை கனிமொழிதான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் அவரே கவனிக்கிறார். இந்த கலைஞர் டி.வி.தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற பால்வா குழுமத்திடம் இருந்து ரூ. 200 கோடியை பெற்றுள்ளது எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞர் யு.யு.லலித் வாதாடினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் அந்த டி.வி.யை நிர்வகிப்பவராக இருக்கலாம். ஆனால் திரைக்குப் பின்னால் இருந்து எல்லாக் கட்டுப்பாடுகளையும் இயக்குபவர் கனிமொழிதான் என்றும் எனவே கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதை தாம் ஆட்சேபிப்பதாகவும் அவர் கூறினார்.
கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன. அந்த கலைஞர் டி.வி.க்குத்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக பெற்ற நிறுவனத்தினரிடம் இருந்து ரூ. 200 கோடி சென்றது என்றும் லலித் வாதாடினார். இந்த ரூ.200 கோடி பரிமாற்றத்தில் கனிமொழிக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க தங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். ரூ. 200 கோடி பணப் பரிமாற்றத்தில் கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே இவர்கள் இருவருக்கும் சாதகமாக தீர்ப்பு வழங்கக்கூடாது என்றும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற குற்றவாளிகளைப் போல நீதிமன்ற காவலுக்கு (சிறைக்கு) அனுப்ப வேண்டும் என்றும் லலித் தனது வாதத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த கலைஞர் டி.வி.யில் 80 சதவீத பங்குகள் கருணாநிதி குடும்பத்தினருக்கே இருப்பதால் நிதி பரிவர்த்தனை தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் கலைஞர் டி.வி.யில் உள்ளன. ஆனால் இந்த டி.வி.யின் நிர்வாக பணிகளில் அவர் தீவிரமாக எதிலும் ஈடுபடவில்லை. அந்த டி.வி.யை 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும், சரத்குமாரும்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த ஜாமீன் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, இவற்றின் மீதான தீர்ப்பை வருகிற 14 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கனிமொழியும், சரத்குமாரும் தினமும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது
07 May 2024சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குகிறது : சீமான் குற்றச்சாட்டு
07 May 2024சென்னை : 'நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது.
-
வங்கதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் உயிரிழப்பு
07 May 2024டாக்கா : கடும் வெப்ப அலையால் கடந்து இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வங்கதேசத்தின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.