எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.- 18 - நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் பணநாயகத்தை மக்களின் ஜனநாயகம் வென்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 தொகுதிகளில் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழகத்தில் நடைபெற்ற 14 வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதற்கு முன்பு வரை நேர்மையாகவும், ஜனநாயகமாகவும் நடைபெற்று வந்த தமிழகத்தின் பொது மற்றும் இடைத் தேர்தல்களில் முதல் முறையாக திருமங்கலம் இடைத் தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் விளையாடியது. அந்த தேர்தல் பணநாயக தேர்தலாகவும் மாறியது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, திருமங்கலம் இடைத் தேர்தலுக்கு பொறுப்பேற்று தேர்தல் அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டும், ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வீடு வீடாக விநியோகித்தனர். அப்போது தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால் அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் தி.மு.க.வினர் மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிலர், பணத்தை பெற்றுக் கொண்டோம் என்பதால் தி.மு.க.வுக்கு பயந்து கொண்டே ஓட்டு போட்டனர். திருமங்கலம் தொகுதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகத்தை தோற்கடித்து பணநாயகத்தை வெற்றி பெற செய்தது. அங்கு தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தி.மு.க.வினர் கோடி கோடியாக பணத்தை செலவு செய்தனர். அங்கு தி.மு.க வெற்றி பெற்ற பின்னர் திருமங்கலம் பார்முலா என்ற புதிய வார்த்தை உருவானது. திருமங்கலத்தை தொடர்ந்து மதுரை மேற்கு, மத்தி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு இடைத் தேர்தல்களிலும் திருமங்கலம் பார்முலாவையே தி.மு.கவினர் பின்பற்றினர். அங்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து தி.மு.கவை வெற்றி பெறச் செய்தனர். இனி எந்த தேர்தல் நடந்தாலும் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க புதுக் கணக்கு போட்டது.
இந்நிலையில் தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு பெறும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத் தேர்தலிலும் திருமங்கலம் பார்முலாவை கடைப்பிடித்து மீண்டும் தி.மு.கவை ஆட்சிக்கு கொண்டு வர தி.மு.க. தலைமையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கணக்குப் போட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தலை சந்திக்க தயாராகினர். இவர்களின் திருமங்கலம் பார்முலாவை கண்டு எதிர்க்கட்சிகளும் கலக்கத்தில் இருந்தன. அப்படியிருந்தும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் மிகுந்த தைரியத்துடன் கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கினார். அவர்களின் திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கவும் கூட்டணி கட்சியினருடன் ஜெயலலிதா செயல் திட்டம் வகுத்தார்.
நிலைமை இப்படி இருக்க தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீண்குமார் நியமிக்கப்பட்டார். அவரது நியாயமான நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதில் இடையூறு ஏற்பட்டது. பறக்கும் படை, வீடியோ குழுக்கள் என பல குழுக்கள் அமைத்து தி.மு.க வினர் கடத்திய பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்து போன தி.மு.க.வினர் பின்னர் சுதாரித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு பொறுப்பாளர்கள் மூலம் ஓட்டுக்கு ரூ. 200 ஐ இரவில் மின்தடை ஏற்படுத்தி வழங்கினர். தொகுதிக்கு ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்தனர்.
இதையறிந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சியினர், நாம் தமிழர் இயக்க நிறுவனர் இயக்குனர் சீமான் ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களில், தி.மு.கவினர் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா உங்களுக்கு தருகின்றனர். உங்களிடம் இருந்து கொள்ளையிட்ட, உங்களது உழைப்பை சுரண்டிய பணத்தை தானே தருகின்றனர். உங்களது பணத்தை உங்களுக்கு தரும் போது அதை நீங்கள் மறுக்காமல் வாங்கி கொள்ளுங்கள். ஓட்டுக்களை மட்டும் அவர்களுக்கு போட்டு விடாதீர்கள். அப்படி காசுக்காக தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போட்டால் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள முடியாது என பிரச்சார மேடைகளில் பேசினர். இவர்களின் இந்த பிரச்சாரமும், தி.மு.க ஆட்சியில் பட்ட துன்பங்களையும் மக்கள் சிந்திக்க தொடங்கினர். பணத்தை பெற்றுக் கொண்ட தி.மு.கவிற்கு ஓட்டளித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் நிலை என்ன ஆகும் என மக்கள் யோசித்து தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்து தி.மு.கவினர் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.கவுக்கு எதிராகவும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகவும் ஓட்டளிக்க ஏக மனதாக முடிவு செய்தனர். தேர்தலின் போது பணம் கிடைக்கப் பெறாதவர்கள் தி.மு.கவினர் வீடுகளுக்கு சென்று எங்கள் வீட்டில் உள்ள ஓட்டுக்களுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லையே. எப்போது கொடுப்பீர்கள் என கேட்டு, பணத்தை பெற்றனர். இது தவிர இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். ஆனால் தற்போது ரூ. 200 மட்டுமே தருகின்றனரே என தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபமடைந்தனர். தற்போது ரூ. 200 கொடுத்து விட்டு ஜெயித்து ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு கோடி கோடியாக கொள்ளையடிக்க நினைக்கும் தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபம் கொண்டனர். பணத்திற்கு தங்களை தி.மு.க அடிமையாக்கப் போகிறார்கள், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏழை, நடுத்தர மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவர் என்பதை நன்கு உணர்ந்த தமிழக மக்கள் பணநாயகத்தை முறியடிக்க தீர்க்கமாக முடிவு செய்தனர். அவர்களது கோபங்களை வெளிப்படுத்த தேர்தல் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏப்ரல் 13 ல் அவர்கள் தங்களது கோபங்களை தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்குகளாக பதிவு செய்தனர். முடிவுகள் தி.மு.க வுக்கு மிக மோசமான தோல்வியை ஏற்படுத்தியது. இதன் மூலம் பணநாயகத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்ற தி.மு.கவினரின் எண்ணமும், தப்புக்கணக்கும் தோற்றுப் போயுள்ளது. ஜனநாயகத்தை நம்பிய அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று 3 வது முறையாக ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக ஆகியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.