முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடசென்னை மாவட்ட செயலாளராக என. பாலகங்கா நியமனம் - ஜெயலலிதா அறிவிப்பு

சனிக்கிழமை, 28 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 28 - வடசென்னை மாவட்ட செயலாளராக என. பாலகங்கா நியக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக என்.பாலகங்கா எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த சேகர்பாபு தி.மு.க. வில் சேர்ந்ததால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயக்குமார் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் கட்சி பொறுப்பான மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வட சென்னை மாவட்ட அ.தி. மு.க. செயலாளராக என். பாலகங்கா எம்.பி.யை அ.தி. மு.க. பொதுச்செயலாளரும், முதல்​அமைச்சருமான ஜெயலலிதா நியமித்துள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:​ கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளராகவும், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளராகவும் இருந்து வரும் நா.பாலகங்கா எம்.பி. இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் நா.பாலகங்கா எம்.பி. இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்