எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, மே.31 - தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கம் வெல்ல அரசில் குறுக்கீடு இன்றி தகுதியும், திறமையும் வாய்ந்த வீரர்களை ஊக்கப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி கூறினார்.
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல்குளம், ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் கட்டப்பட்டுவரும் நவீன உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்துடன் கூடிய செயற்கை புல்வெளி ஆக்கிமைதானம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்விற்கு பின் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராமப்புறங்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், அவர்களை உற்சாகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் வரும் ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதிவரை தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் சிறப்பிடம் பெறும் தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்க தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில்தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கடந்த 91-ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ஆசியவிளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப்போட்டியில் பங்கேற்க விளையாட்டு வீரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். அதனால்தான் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு தமிழக வீரர்கள் பல பரிசுகளை பெற்றனர்.
பொதுவாக கிரிக்கெட்டில்தான் இளைஞர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. நகர்புறங்களில் டென்னிஸ் விளையாட்டும், கிராமப்புறங்களில் கபடி விளையாட்டும் பிரபலமாக உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி கிராப்புறங்களில் டென்னிஸ், இறகுப்பந்து விளையாட்டுகளை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனையொட்டி கிராப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக தாலுகா அளவில் ஷட்டில் காக், டென்னிஸ் விளையாட்டுகளில் பயிற்சி பெறுவதற்கான மைதானங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கலந்துகொண்டு பதக்கங்களை குவிக்கும் வகையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் தகுதியும், திறமையும் வாய்ந்த வீரர்கள், வீராங்கணைகளுக்கே விளையாட்டில் முன்னுரிமை அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு துறையில் காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புள்ளி விவரங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்கவும், விளையாட்டு அரங்கங்களையும், விடுதிகளையும் சுத்தமாக வைத்திருக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு அரங்கங்களை செப்பனிட்டு சீரமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக நவீன ஓடுதள பயிற்சி மைதானம் திருச்சியில் அமைக்க வேண்டும் என்ற தடகள வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் ஸ்குவாஸ் விளையாட்டு அரங்கு கட்டுமான பணிகளும் விரைவில் நிறைவடையும்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி பெறவரும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க விரைவில் பெண் பயிற்சியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிட அமைப்பு செயற்பொறியாளர் அசோகன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொதுமேலாளர் சுந்தரம், திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன், தேசிய தடகள வீரர் அண்ணாவி, அமைச்சரின் உதவியாளர் அன்பழகன், அ.தி.மு.க இளைஞரணி கோபிகண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ