எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஏப்.17 - 50 ஆண்டுகளாக மாநிலங்களிடையே பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது என சேலம்_கிருஷ்ணகிரியில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடி சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து தமிழகத்தில் அவர் 2 வது கட்ட பிரச்சாரத்தை நேற்று துவக்கினார்.முதலில் அவர் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசினார். பின்னர் சேலத்தில் தேமுதிக கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷை ஆதரித்து பேசினார்..
இதற்காக அவர் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்படர் மூலம் கிருஷ்ணகிரி வந்திறங்கினார். அங்கு பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசினார்.பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மாலை 5.35 மணிக்கு சேலம் வந்த அவர் சேலம் இரும்பாலை ஹெலிபேடு தளத்தில் இறங்கினார். பின்னர் இரும்பாலை வித்யா மந்திர் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.. மேடை ஏறிய மோடி நேராக மேடையின் ஓரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாஜக பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பேசினார். பின்னர் பேசிய நரேந்திர மோடி அனைவரும் தமிழில் வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அவர் பேசியதாவது.நான் இரும்புமனிதரின் வழித்தோன்றலாக வந்தவன். அந்த வகையில் சேலம் இரும்பாலையில் பேசுவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.சேலம் ஸ்டீஸ் பிளாண்ட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்டீல் மலேசியாவின் உலக இரட்டை கோபுரத்தில் உள்ளது.மெல்பேன் ஸ்டேடியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் அரிய விஷங்கள் உள்ளது.சேலத்திற்கு சக்தி உள்ளது. ஆனால் பயன்பபடாமல் உள்ளது. சேலம் இரும்பாலைக்கு உற்பத்தி போருட்ககளுக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.சர்வதேச அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டார்கள் யாருக்கு வாக்கு அளிக்கவேண்டும் என்று தேசத்தை விற்பவர்களைவிட சாயா(டீ)விற்பவன் மேல் என்று நினைத்துவிட்டார்கள்.
வெள்ளைக்காரனின் பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் கடைபிடித்து .மாநிலங்களில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது.காரணம் மின்சாரம்,தண்ணீர் ,மொழி இவற்றை வைத்து அவர்களை பிரித்தாளுகிறது.50 வருடமாக காங்கிரஸ் இதை செய்து வருகிறது. ஒரு நாள் தேசம் ஒன்றாகும். அப்போது காங்கிரஸ் காணாமல் போய்விடும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களை அரவணைத்து செல்வோம். அனைவரும் ஒன்றாக முன்னேற வழி செய்வோம்.காங்கிரஸ் 21 ம் நூற்றாண்டிற்கு ஒத்துவராத கொள்கையை கடைபிடிக்கிறது.இதுபோன்ற அரசியலை பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள்.மக்கள் செயல்பாடுகளைதான் எதிர்பார்க்கிறார்கள்.வாக்குறுதிகளை அல்ல.சேலத்தில் 60 சதவீதம் நகரமயம்.73 சதவீதம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.65 சதவீதம் கழிப்பறை வசதி இல்லை.50 சதவீத வீடுகளில் சாக்கடை வசதி இல்லை.60 வருடங்களாக இப்படிதான் இருக்கிறது. ஒருநாடு முன்னேற்றமடைய சுகாதாரம் முக்கியம்.அதனால்தான் வாஜ்பாய் முழுசுகாதார திட்டம் கொண்டுவந்தார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 60 மாதங்களில் முழுசுகாதார திட்டத்தை செயல்படுத்துவோம்.
காந்தியின் 150 வது பிறந்தநாளில் எல்லா வீட்டிற்கு டாய்லட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.திறந்தவெளி மலம் கழிப்பதை அறவே ஒழிப்போம்.75 வது சுதந்திர தினவிழாவில் எல்லா ஏழைகளுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்போம். சேலத்தில் நெசவு தொழில் முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம்.
மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் சேலம் முன்னிலையில் உள்ளது.ஆனால் மரவள்ளிகிழங்கு விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை.அவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.மரவள்ளிக்கு நியாமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வேளாண்மை துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தடையில்லா தண்ணீர், தடையில்லா மின்சாரம் வழங்கி விவசாயத்தை முன்னேற்றுவோம்.விவசாயிகள் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். நதிகள் இணைக்கப்படும்.அப்படி இணைக்கப்பட்டால் தமிழகத்திற்கு தங்குதடையின் தண்ணீர் கிடைக்கும்.போதிய மின்சாரமும் கிடைக்கும். இதனால் தமிழகம் இந்தியா மாற்றியமைக்கும் அளவிற்கு சிறப்பான மாநிலமாக திகழும். காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.நான் 60 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.. இந்த கூட்டத்தில் பா.ம.க.துணை தலைவர் மு.கார்த்தி,தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.பார்த்தீபன்,மோகன்ராஜ், தேமுதிக சேலம் வேட்பாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், சேலம் பாஜக மண்டல தலைவர் முருகேசன்,மாவட்ட தலைவர் அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.பாதுகாப்பு பணிகள் மத்திய மண்டல ஐ.ஜி.ராமசுப்பிரமணியன்,சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.