முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டை சீரழித்து விட்டார் சிதம்பரம்: மம்தா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

மால்டா, ஏப் 21 - நாட்டை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சீரழித்து விட்டார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில், 

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நமது நாட்டை சீரழித்து விட்டார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் தோல்வியடைவோம் என்ற அச்சமே அதற்கு காரணமாகும். சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் மேற்கு வங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்த நிதி நிறுவனங்கள் அனைத்தும் முந்தைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தோன்றி தழைத்தோங்கியவை ஆகும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் செபி அமைப்பு என்ன செய்து கொண்டிருந்தது? தற்போது இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூச்சல்கள் எழுகின்றன. சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடலாம் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்