எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மசாலா,ஜூன்.- 28 - கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் வழிபாடு செய்தார். ஆனால் அவர் சத்தியம் எதுவும் செய்யவில்லை. முதல்வர் எடியூரப்பா மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர பெங்களூர் வழக்கறிஞர் ஒருவருக்கு அந்த மாநில கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். இதனால் பரத்வாஜூக்கும் எடியூரப்பாவுக்கும் மோதல்போக்கு முற்றிய நிலையில் உள்ளது. மேலும் எடியூரப்பா மீது நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி சுமத்தினார். பெங்களூரில் பல இடங்களில் எடியூரப்பாவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குமாரசாமி கூறினார். இதற்கு எடியூரப்பா மறுத்ததோடு என் மீது ஊழல் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை நிரூபிக்க தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா என்று குமாரசாமிக்கு எடியூரப்பா சவால் விடுத்தார். இந்த சவாலை குமாரசாமியும் ஏற்றுக்கொண்டார். அப்படியென்றால் சத்தியம் செய்ய தேதி குறியுங்கள் என்று இருவரும் கூறினர். இந்தநிலையில் கோயிலில் சத்தியம் செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியலில் மதத்தை கலக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சத்தியம் செய்யும் முடிவை வாபஸ் பெற்றுக்கொண்டதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி மற்றும் மதத்தலைவர்கள் கேட்டுக்கொண்டதிணங்க சத்தியம் செய்வதை நிறுத்திக்கொண்டதாகவும் எடியூரப்பா கூறினார்.
அதேசமயத்தில் தர்மசாலாவில் உள்ள சுவாமி மஞ்சுநாதர் சுவாமி கோயிலுக்கு சென்று முதல்வர் எடியூரப்பா நேற்று வழிபாடு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, நான், சுவாமி மஞ்சுநாதரை இன்று (நேற்று)வழிபட்டேன். அப்போது எனக்காக எதையும் நான் கேட்டுக்கொள்ளவில்லை. கர்நாடக மாநிலம் நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று மாநிலத்தின் 6 கோடி மக்களின் சார்பாக கடவுள் மஞ்சுநாதரை கேட்டுக்கொண்டேன் என்றார். மாநிலத்தில் நல்ல முறையில் பருவமழை பெய்து மேலும் மேலும் செழிக்க வேண்டும். கடவுளின் அருளால் கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து செழித்துள்ளது. அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதேமாதிரி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகத்தை கடனுக்குள்ளாக்கிவிட்டேன் என்று காங்கிரசாரும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரும் கூறுவை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னுடைய 3 ஆண்டு ஆட்சியில் மாநிலம் முன்னேறியுள்ளது. மாநிலத்தின் நிதிநிலைமையும் நன்றாக உள்ளது என்றும் எடியூரப்பா மேலும் கூறினார்.
முன்னதாக முதல்வர் எடியூரப்பாவுடன் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கோயிலுக்குச் சென்றனர். அமைச்சரவை விஸ்தரிக்கப்படுமை என்று நிருபர்கள் கேட்டதற்கு கோயில் ஸ்தலத்தில் அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை என்று எடியூரப்பா பதில் அளித்தார். பின்னர் ஒரு பஸ்சில் ஏறி, குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு எடியூரப்பா சென்றார். தர்மசாலாவில் எடியூரப்பாவுக்கும் குமாரசாமிக்கும் எதிராக விவசாய சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். கோயில் நகரான தர்மசாலாவை அரசியலாக்குவதற்கும் பக்தர்களுக்கு இடையூறு செய்வதற்கும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.