எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.29 - மக்களின் சுமையை போக்கும் வகையில் சமையல் எரிவாயு விலையில் ரூ.14.73 குறைகிறது, வாட் வரியை நீக்கி முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச சந்தை விலைக்கு ஏற்றாற்போல் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாக, பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில், 24.6.2011 நள்ளிரவு முதல் டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவிற்கான விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும், மண்ணெண்ணெய்க்கான விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தி மைய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இதிலும் குறிப்பாக சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டதன் விளைவாக தாய்மார்கள் விரக்தியில் உறைந்து போயுள்ளனர். மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த சமையல் எரிவாயுவை, கரி, விறகு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக, கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ள சூழ்நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் என்ற அளவிற்கு விலையை மைய அரசு உயர்த்தி அறிவித்திருப்பது மக்களால் தாங்க இயலாதது ஆகும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி பெட்ரோலியப் பொருட்களுக்கான விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு, மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியினைக் குறைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குவது வேடிக்கையானது ஆகும். நம் நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருட்கள் அனைத்துமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மூலம் மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. உள்நாட்டில் பெறப்படும் கச்சா எண்ணெயின் மூலமும் பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் லாப நோக்கு, நிர்வாகத் திறமை, நிர்வாகச் செலவுகள் ஆகியவையும் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை மட்டும் சுட்டிக்காட்டி மைய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிப்பது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறு, பல்வேறு வழிமுறைகளையும் ஆராய்ந்து, டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயராதவாறு பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல், மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று மைய அரசு அறிவுரை கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எனவே தான், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்வினை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், இந்த விலை உயர்வினை மைய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். 2006 முதல் 2011 வரையிலான முந்தைய தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரித்துவிட்டது. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியம், மாநில போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் நிறுவனம் உட்பட பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கிய விவசாயிகள் ஆகியோருக்கு எல்லாம் பல மாதங்களாக நிலுவைத் தொகையை வழங்காமல் விட்டுச் சென்றுள்ளது முந்தைய தி.மு.க. அரசு. இதுவன்றி, கடந்த தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டினால், ஒவ்வொரு துறையும் மிக அதிக அளவிலான தொடர் இழப்பை கடந்த 5 ஆண்டுகளில் சந்தித்து வந்துள்ள சூழ்நிலையில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லாத சூழ்நிலையில், தற்போது சமையல் எரிவாயுவின் விலை மிக அதிகபட்சமாக 50 ரூபாய் அளவுக்கு ஏற்றப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைப் பாதுகாக்க தமிழக அரசால் வழங்கக்கூடிய நிவாரணம் அனைத்தையும் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். அதன் அடிப்படையில், மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு, இனிமேல் குறைப்பதற்கு ஏதுமில்லை என்ற அளவில் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நான் முடிவு எடுத்துள்ளேன்.
அதன்படி, சமையல் எரிவாயு மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 4 விழுக்காடு மதிப்புக் கூட்டு வரியை 1.7.2011 முதல் அறவே நீnullக்கிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனையடுத்து, தமிழ்நாட்டில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு சிலிண்டர் எரிவாயுவின் விலை 404 ரூபாய் 40 பைசா என்ற அளவிலிருந்து 389 ரூபாய் 67 பைசா என்ற அளவிற்கு, அதாவது ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவின் விலை 14 ரூபாய் 73 பைசா அளவிற்கு குறையும் என்பதையும், இனி வருங்காலங்களிலும் சமையல் எரிவாயுவின் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட 50 ரூபாய் விலை உயர்விற்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி மாநில அரசிற்கு ஆண்டொன்றுக்கு 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கெனவே சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டொன்றுக்கு கிடைத்து வந்த 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம் 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.