எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 24 - சுரங்க ஊழலில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் பாரதிய ஜனதாவுக்கு தலைவலி மேலும் அதிகரித்துள்ளது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தென் இந்தியாவில் பாரதிய ஜனதா காலூன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் முதல்வர் எடியூரப்பா. தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. ஆனால் அவர் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி கட்சி மேலிடத்திற்கு பெரும் சிக்கலையும் தலைவலியையும் ஏற்படுத்தி வருகிறார். முதலில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட பிரதமருடன் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர்களை அழைத்து செல்லாமல் ஒரு பெண் அமைச்சரை உடன் அழைத்து சென்றார். இதனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் உள்ள ரெட்டி சகோதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எடியூரப்பா பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. கடைசியில் கட்சி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்தது. இதில் முதல் தடவையாக எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்பியது. அதனை அடுத்து பாரதிய ஜனதா மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 24 பேர் எடியூரப்பாவுக்கு எதிராக கிளம்பினர். இதனால் அவர் மெஜாரிட்டி எடியூரப்பா மெஜாரிட்டி பலத்தை இழந்தார். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் அந்த 24 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளாததால் எடியூரப்பா பதவி இரண்டாவது தடவையாக தப்பியது. அடுத்து பெங்களூர் மற்றும் பல இடங்களில் தனது உறவினர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். மேலும் கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் எடியூரப்பா அரசை நீக்கிவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டதால் எடியூரப்பாவின் பதவி 3-வது முறையாக தப்பியது. தற்போது எடியூரப்பா மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இது விசாரித்து அறிக்கை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கசிந்து விட்டது. அதில் சட்ட விரோத சுரங்க நிறுவனங்களில் இருந்து எடியூரப்பா லஞ்சம் பெற்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் எடியூரப்பாவின் பதவிக்கு நெடுங்கண்டம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் கட்சி மேலிடத்திற்கு அந்த கட்சி தலைவர்களே கோரிக்கை விடுத்து வருகின்றனர். எடியூரப்பாவுக்கு கருணை காட்ட வேண்டாம் என்றும் அவர்கள் கோரி வருகிறார்கள். அறிக்கை வெளியாகட்டும். அறிக்கையை பார்த்த பின்னர் நடவடிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும் என்று கட்சி மேலிடம் கூறினாலும் எடியூரப்பாவுக்கு எதிராக தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் பாரதிய ஜனதாவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவால் தார்மீக அடிப்படையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அளவில் ஊழலுக்கு எதிராக பாரதிய ஜனதா போராடி வருகிறது. ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு, லஞ்சம் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா குரல் கொடுத்துக்கொண்டியிருக்கிற நேரத்தில் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதோடு காங்கிரஸ் கட்சியின் கையில் ஒரு ஆயுதம் கிடைக்க செய்துவிட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள பாரதிய ஜனதா லோக்ஆயுக்தா அறிக்கை வெளியாகட்டும் அதை நன்கு ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் அவருக்குள்ள செல்வாக்கு குறித்தும் கட்சி கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது. கட்சி எம்.எல்.ஏ.க்களில் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதோடு கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத் பிரிவு மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. எடியூரப்பாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆனந்த குமாரை முதல்வராக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதற்கு எடியூரப்பா சம்மதிக்காவிட்டால் கர்நாடகத்தில் கட்சியின் வளர்ச்சி பாதிக்கும். அதனால் அரசை கலைத்துவிட்டு இடைத்தேர்தலுக்கு உத்தரவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் லோக்ஆயுக்தா அறிக்கையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு எத்தகைய தன்மையுடையது என்பதையும் ஆராய்ந்த பின்னரே எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் எடியூரப்பாவை டெல்லி வரும்படி பா.ஜ. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அவர் நாளை டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து தன் மீது அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.