எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - ஒலிம்பிக் துப்பாக்கிசுடும்போட்டியில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழக போலீசாருக்கு அதி நவீன துப்பாக்கிகள் வாங்க நிதி ஒதுக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அகில இந்திய அளவிலான 11வது போலீஸ் துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளித்து முதல்அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
1991ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய போலீஸ் பணித்திறன் போட்டி நடந்தபோது நான் புதிதாக ஒரு பரிசுகோப்பையை ஏற்படுத்திய நிகழ்ச்சியை நினைவு கூறுகிறேன். அப்போது தமிழ்நாடு போலீஸ் துப்பாக்கி சுடும் பிரிவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கினேன். 2000, 2004, 2009 ஆண்டுகளில் தமிழக போலீஸ் அணி துப்பாக்கிசுடும் போட்டியில் பரிசு கோப்பையை பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது மீண்டும் அந்தகோப்பையை தமிழ்நாடு பெற்றிருப்பதை எண்ணி மேலும் மகிழ்கிறேன். 1991ம்ஆண்டு நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்றபோது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தடுக்க போதுமான ஆயுதங்கள் இல்லாமல் தமிழக போலீஸ் இருந்ததை உணர்ந்தேன்.
அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்கப்படவேண்டிய 2ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளே போலீசாரிடம் இருந்தன. ஆனால் அதே நேரத்தில் தீவிரவாதிகள் அதி நவீன ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது நான் டெல்லி சென்றநேரத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், உள்துறை மந்திரி எஸ்.பி.சவான், நிதி அமைச்சர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து தமிழக போலீஸ் துறையை நவீனப்படுத்த குறைந்தபட்சம் ரூ.30 கோடியாவது நிதி ஒதுக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தேன்.
மத்திய அரசு கொஞ்சம் நிதி கொடுத்தது. அதைவைத்து ஓரளவுக்கு போலீஸ் துறையை நவீனப்படுத்தினேன்.
போலீசாருக்கு ஏ.கே.47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், நவீன வாகனங்கள் வாங்கப்பட்டன.
இவ்வாறு தமிழக போலீஸ்துறை நவீனமாக்கப்பட்டதை பார்த்து இதர மாநிலத்தினரும் தங்கள்போலீஸ் துறையை நவீனப்படுத்த நிதி கேட்க ஆரம்பித்தன.இவ்வாறு போலீஸ்துறையை நவீனமாக்கும் திட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது தமிழகம்தான்.
போலீஸ்துறையை நவீனமாக்குவதற்கு வித்திட்டது நான் தான் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.
நவீன ஆயதங்களை வாங்குவதுடன் எல்லாம் முடிந்துவிடாது.அத்தகைய நவீன ஆயுதங்களை திறமையாக கையாளுவதுதான் முக்கியம். துப்பாக்கியை கையாளுவது சாதாரண விஷயம் அல்ல. அது நுட்பமான செயலாகும். தீவிரவாதிகளை போலீசார் குறிபார்த்து நுட்பமாக சுட்டு அப்பாவி மக்களை எவ்வித ஆபத்தும் இல்லாமல் பாதுகாத்திடவேண்டும். பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் சிலரை பிடித்துவைத்திருக்கும் சூழ்நிலையில், போலீசார் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது. அதுபோன்ற நேரத்தில் பிணைக்கைதிகளையும், அப்பாவி மக்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியவேண்டும். அந்தநேரத்தில் ஒரு வினாடியில் போலீசார் எடுக்கும் முடிவு அப்பாவி மக்களின் வாழ்க்கையையும் மரணத்தையும் முடிவு செய்யும்.
இந்த ஆண்டு துப்பாக்கிசுடும் போட்டியில் 9 பெண் போலீசார் கலந்து கொண்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் 1992ம்ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நான் தான் முதல் முதலாக தொடங்கினேன்.
அதைப்போல முதல் முதலாக பெண் கமோண்டோ போலீஸ் பிரிவை தொடங்க உத்தரவிட்டதும் நான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
போலீசாரின் வாழ்க்கை ரோஜா மலர்கள் நிறைந்த படுக்கை அல்ல. காலையில் பணிக்காக வெளியே செல்லும்போலீசார் இரவில் வீடு திரும்புவார்களா என்பது உத்தரவாதம் கிடையாது. ஏதாவது தீவிரவாதிகள் தாக்குதல் என்றால் போலீசாரின் நிலைமைப்பற்றி சொல்லத்தேவையில்லை.
சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் போலீசார் வாகனங்கள்மோதி பலியாகி தன் குடும்பத்தினரை தவிக்கவிட்டு செல்லும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.
ராணுவத்தினரும் போலீசாரும் நாட்டுமக்களை பாதுகாக்கும் பாதுகாவலர்கள். வசதிகளும், ஊக்கமும் அளிக்கப்பட்டால் தமிழக போலீசார் உலகில் உள்ள எந்த சிறந்த போலீசாருக்கும் இணையாக செயல்படுவார்கள்.
ஆயுதங்களை போலீசார் கையாளும் திறனை பரிசோதிப்பதற்காக இத்ததைய துப்பாக்கி சுடும்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதேபோல 2007ம் ஆண்டில் இருந்து அகில இந்திய போலீஸ் விளையாட்டு துப்பாக்கிசுடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது ஒலிம்பிக்கில் நடத்தப்படும் துப்பாக்கி சுடும் போட்டியை போன்றதாகும். இதற்கு .177 அல்லது .22 பிஸ்டல்கள், துப்பாக்கிகள் தேவை. ஆனால் இதெல்லாம் தமிழ்நாடு போலீசில் இல்லை. எனவே தமிழக போலீசார் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும்போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறும் வகையில் இத்தகைய நவீன துப்பாக்கிகள் வாங்க தேவையான நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் மூலம் துப்பாக்கி சுடும் திறனை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.