எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.- 12 - மாநிலத்தின் 5 ஆண்டுகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 12-வது ஐந்தாண்டு திட்டம் அமைய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கூறினார். சென்னையில் நேற்று நடைபெற்ற மாநில திட்டக்கமிஷன் கூட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி பேசியதாவது:- மாநில திட்டக்கமிஷன் முதல் கூட்டத்தில் பேசுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மாநில திட்டக்கமிஷனில் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாநில முன்னேற்றத்திற்கு வளரச்சி திட்டம் வகுத்து அதை திறம்பட செயல்படுத்துவதில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு அதை நடைமுறைப்படுத்துவதில் தன் தலைமையிலான அரசு மிகவும் ஆவலுடன் இருக்கிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான இந்த சூழ்நிலையில் மாநிலம் எதிர்நோக்கியுள்ள சில வாய்ப்புகள் மற்றும் நெருக்கடி குறித்து திட்டக்குழு உறுப்பினர்கள் பரிசீலனையில் எடுத்துக்கொள்ள வேண்டும். சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களும் பயன்பெறும் வகையில் நிலையான அதிகப்பட்ட வளர்ச்சியை அடைய எனது அரசு உறுதிபூண்டுள்ளது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மாநில வளர்ச்சி 9 சதவீதமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை துறைகளில் வளர்ச்சி தேசிய சராசரி வளர்ச்சியைக்காட்டிலும் குறைவாக இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதன் விளைவால் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி முதல் 4 ஆண்டுகளில் 7.8 சதவீதமாகத்தான் இருந்தது. மாநிலத்தில் சேவை துறையில் மட்டும் வளர்ச்சி அதிகம் ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி நிலையானதாக இருக்காது. அதனால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருக்கும் முதல் நிலை மற்றும் உற்பத்தி துறைகளில் அதிக வளர்ச்சியை நாம் அடைய வேண்டிய நிலையில் இருக்கிறோம். வரும் ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை நாம் அடைய வேண்டும் என்றால் சேவை துறையில் உள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சியில் உள்ள தடங்கல்களை நாம் அகற்றியாக வேண்டும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வை அகற்றி அதிக வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் 4 ஆண்டுகளில் முதல்நிலை துறையில் எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல்நிலை துறை வளர்ச்சியை புத்துயிரூட்ட முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மாநிலத்தில் கடந்தாண்டு 85.35 லட்சம் மெட்ரிக் டன் உணவுதான்யம்தான் உற்பத்தி செய்யப்பட்டது. இதை முறியடித்து நடப்பு 2011-2012-ம் ஆண்டில் உணவு தான்ய உற்பத்தியை 115 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி திறன் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 200 முதல் 300 சதவீதம் வரை அதிகரிக்க நாம் இலக்கு நிர்ணயத்து செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த விவசாய திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை நாம் அடைய வேண்டும். நாட்டில் பணவீக்கத்தின் காரணமாக வருமான குறைவு ஏற்பட்டிருப்பது கருத்தில்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சமுதாயத்தில் நடுத்தர ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய அரசானது சமுதாயப் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சமுதாயத்தில் நலிவடைந்தவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு பொருளாதாரம் மற்றும் நலத்திட்டங்களை எனது அரசு எடுத்துவருகிறது. ஏழை மக்கள் தங்களுடைய வருமானத்தைக் கொண்டே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். திட்ட அணுகுமுறையும் அதன் செயல்படுத்தும் முறையும் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும். என்னுடைய அரசின் புதிய திட்டமான தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தால் கிராமப்புறங்கள், நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி அடையும். மேலும் சென்னையில் மோனோ ரயில் திட்டம், திருமழிசையில் சேட்டிலைட் நகரம், கிராமப் புறங்களில் பசுமைக் குடில்கள் அமைக்கத் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி ஆராய்ச்சிக் கூடங்கள் அமைப்பது, மின்சார உற்பத்தியையும் அதிகரிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது ஆகிய முக்கிய திட்ட செயல்பாடுகள் மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். மாநிலத்தின்அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையானவைகளை நிறைவேற்றும் வகையில் 12- வது ஐந்தாண்டு திட்டத்திற்கு திட்டக்கமிஷன் சரியான அணுகுமுறையுடன் திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் என்று நம்புகிறேன். நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.