எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.8 - கூட்டணி முறிவு விலகல் என்று ஊடல் காட்டிய கருணாநிதி ராஜினாமா நாடகம் நடத்த தி.மு.க. தரப்பு மத்திய மந்திரிகளை ராஜினாமா கடிதத்துடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ராஜினாமாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்ற ஒரு வார்த்தைக்காக தவம் கிடந்த தி.மு.க. தலைவர்களுக்கு அவர்கள் எண்ணப்படியே காங்கிரஸ் பிரணாப்முகர்ஜி மூலம் சிக்னல் காட்டியதும், உடனே செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் தரப்பில் பேசியுள்ளார் என்று சந்தோஷமாக தெரிவித்தனர். காங்கிரஸ் ஒரு படி முன்னேறி உள்ளதால் தங்கள் தரப்பு முன்னேற்றத்தை தெரிவிக்க தங்கள் ராஜினாமா நாடகத்தை ஒரு நாள் ஒத்தி வைத்துள்ளனர்.
ஆரம்பம் முதலே தி.மு.க. காங்கிரஸ் உறவு மேலும் இனித்தாலும் உள்ளுக்குள் வேம்பாக கசந்து கொண்டிருந்தது. கருணாநிதி பூசி மழுப்பி மூடி மறைத்தாலும் அது வெடிக்கவே செய்தது. ஐவர் குழு என்ற ஐவாஷ் குழு அமைத்து இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியபோது தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த காங்கிரஸ் தொடர்ந்து அதை நீடித்து மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்தது. கருணாநிதி விலகல் தீர்மானத்தில் சொன்னதுபோல் கருணாநிதியும், கழகமும் எந்த காலத்திலும் சந்திக்காத சோதனையாக அது அமைந்தது.
ஒரு கட்டத்தில் சீட்டு பேரம் என்பதை தாண்டி தனது மகள் கனிமொழி துணைவியார் ராஜாத்தி அம்மாள் மீது சம்மன் பாயாமல் இருக்க காங்கிரசை கருணாநிதி வலியுறுத்த தொடங்கினார். இதை வைத்து விலக கருணாநிதி முடிவெடுத்தார். மறுபுறம் காங்கிரசின் எண்ணம் வேறாக இருந்தது. தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் கேரளா, மேற்கு வங்காளத்தில், பாண்டிச்சேரியில், அஸ்ஸாமில் காங்கிரஸ் ஸ்பெக்ட்ராம் ஊழலில் திளைத்து தி.மு.க.வுடன் கைகோர்த்து வருவது எதிர்க் கட்சிகள் பிரச்சாரத்தில் பிரதானமாக இருக்கும் ஆகவே தமிழ்நாட்டை மட்டும் பார்த்தால் மற்ற மாநிலங்களை கோட்டைவிட வேண்டி இருக்கும் என்பதால் தமிழ்நாட்டில் தனித்து விடப்பட்டாலும் மற்ற 4 மாநிலங்களில் ஊழல் தி.மு.க.வை கைகழுவி விட்டோம். ராசா மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க.வுடன் தொகுதி ஒதுக்கீட்டை காரணமாக வைத்து முரண்டு பிடித்தனர். இரு தரப்பிலும் மறைமுகமாக வேறு காரணம் இருந்தாலும் 3 சீட்டுக்காக உடைத்ததாக விலகல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றினார்.
காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. விலகல் நாடகம் நடத்தினாலும், ராஜினாமாவை திங்கட்கிழமை வரை தள்ளி வைத்து காங்கிரஸ் இறங்கி வராதா என்று காத்திருந்தார். பின்பு ராஜினாமா லட்டரை பிரதமருக்கு பேக்ஸ் அனுப்பாமல் அனைவரையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.
இடையில் குடும்ப தொலைக்காட்சி முதல் அனைத்து சொந்த தொலைக்காட்சிகளிலும் அறிவாலயம் பக்கம் 5 பேர் கும்பலாக சென்றால் கூட அழைத்து வந்து பாரீர், பாரீர் அரசியல் கட்சிகள் அமைப்புகள் எல்லாம் காங்கிரஸ் வெளியேறியதால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று காட்டிய கூத்தும் நடந்தது.
கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அறிவாலயத்திற்கு வந்து கருணாநிதியை கட்டி பிடித்து ஒப்பாரி வைத்து விட்டு வெளியே வந்து காங்கிரஸ் வெளியேறிய பிறகுதான் தி.மு.க. பெரும்பலம் பெற்று விட்டதாகவும் தாங்கள் மிகுந்த சந்தோஷமாக உள்ளதாகவும் கூறிக்கொண்டனர்.
இதில் மிகப்பெரிய காமெடி: தி.மு.க. செய்தி தொடர்பாளர்? திராவிடர் கழக தலைவர் வீரமணியின் அறிக்கைதான். உலக தமிழர்கள் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை சந்தோஷப்படுகின்றனர் என்று கூறி காமெடி பண்ணினார். அப்படியானால் தி.மு.க. காங்கிரஸ் உறவை உலக தமிழர் முதல் உள்ளூர் தமிழர்கள் வரை இது நாள் வரை வெறுத்து வந்தார்களா என்று கேட்க தோன்றுகிறது.
திருமாவளவனும் தனது பங்கிற்கு கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. அணிக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நினைக்க மறந்து விட்டார்கள். அதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாத புத்தி. தங்கள் குடும்பத்திற்கு பங்கம் வராமலிருக்க கழகத்தை அடகு வைக்க தயங்க மாட்டார் என்பதுதான் அது.
இதுதான் நேற்றைய தினம் டெல்லியில் நடந்தது. இவர்கள் ராஜினாமா லட்டரை கையில் வைத்து கொண்டு கொடுக்காமல் மீடியாக்களை அழைத்து பேசிக்கொண்டு இருந்ததும் காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, ஆசாத் ஆகியோர் கருணாநிதியிடம் பேசியதும் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியது.
``வரும் ஆனா வராது'' என்று வடிவேல் படத்தில் வரும் காமெடி போல் இவர்கள் கூட்டணி கதை மாறிபோனது.
இறுதியில் ராஜினாமாவை எப்படியும் மாலைக்குள் கொடுத்து தானே ஆகவேண்டும் அப்ப முடிவு வரத்தானே போகுது என்று செய்தியாளர்கள் காத்திருந்தனர்.
வீரவசனம் பேசுவதும் காலில் விழுவதும் காலை வாருவதும் எங்களுக்கு கை வந்த கலை வீரவசன படலம் முடிந்ததால் தற்போது காலில் விழும் படலம் என்று காங்கிரஸ் இறங்கி வருவதற்கு தோதாக 1 நாள் ராஜினாமா நாடகத்தை தள்ளி வைத்ததாக முடிவில் அறிவித்துள்ளனர். ஸ்டாலின் நேற்று அறிவாலயத்தில் ஒரு நாள் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.
இப்பொழுது அடிமட்ட தி.மு.க. தொண்டனின் கேள்வி எல்லாம் தலைவா காங்கிரஸ் வெளியேறியதால் சந்தோஷப்படுவதாக ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து படம் பிடித்து காட்டினீர்களே இப்போது மீண்டும் கூட்டணி வந்தால் தொண்டர்களுக்கு எல்லாம் கவலை உங்களுக்கு மட்டும் சந்தோஷமா என்று கேட்கிறான். அதற்கு தயாராக உடன் பிறப்புக்கு கடிதம் தயார் செய்ய தெரியாதா என்ன. நாளை மீண்டும் கூட்டணி சேர்ந்தால் அடிபொடி அமைச்சர்கள் கருணாநிதியின் ராஜதந்திரம் என்று கூறிக்கொள்வார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,