எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.22 - பொங்கல் தினத்தன்று இரவு சென்னை எழிலகத்தில் இயங்கி வந்த தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் தொழில் வணிக வரித்துறையின் தலைமை அலுவலகங்கள் திடீர் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானதால், மக்கள் நலப்பணிகளை செய்து வரும் அந்த இரு அலுவலகங்களும் முறையே, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கவும், அந்த அலுவலகளுக்கு தேவையான தளவாட சாமான்களும் வாங்க ரூ.2.46 கோடி நிதிஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூகநலத்துறை இயக்குனரகம், மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டடத்தில் அரசு விடுமுறை தினமான 15.01.2012 அன்று நள்ளிரவு 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சமூக நலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அலுவலகங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. இவற்றிலிருந்த பல ஆவணங்கள், கோப்புகள், கணினிகள், மேஜை, நாற்காலி போன்ற அனைத்து தளவாடச் சாமான்களும் தீக்கிரையாகி உள்ளன. சமூக நலத்துறைக்கு இதன் மூலம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கும் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களின் பணிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவை என்பதால், இப் பணிகளில் எவ்விதமான தொய்வும் ஏற்படாதிருக்க, உடனடியாக மாற்று இடங்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இயங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பணித்துள்ளார். இதன் அடிப்படையில் சமூகநலத்துறை அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி கட்டடத்திலும், தொழில் வணிகத்துறை அலுவலகம், சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள சவுத்கெனால் பேங்க் சாலையில் அமைந்துள்ள தொழில் கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும் உடனடியாக இயங்க ஆரம்பித்துள்ளன.
சமூகநலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகம் ஆகியவை முழுவீச்சில் செயல்பட ஏதுவாக, சமூகநலத்துறை இயக்குனரகத்திற்கு தேவையான புதிய கணினிகள், மேசை, நாற்காலிகள், தளவாட சாமான்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் வாங்குவதற்காக முதற்கட்டமாக 96 லட்சம் ரூபாயும், இதேபோன்று, தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த தீ விபத்தில் அழிந்த பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் மற்றும் கோப்புகளை விரைந்து மீண்டும் உருவாக்கவும் ஆணையிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த துரித நடவடிக்கையின் மூலம், பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் சமூக நலத்துறையும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்கள், சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் போன்ற பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஆற்றிவரும் தொழில் வணிகத்துறை அலுவலகமும் விரைவில் முழு அளவில் செயல்படத் துவங்கும். மேலும், இத்தொன்மை வாய்ந்த கட்டடத்தின் உறுதித் தன்மையை கண்டறியவும் இதை போன்றே புதிதாக ஒரு கட்டடத்தை இந்த வளாகத்திலேயே கட்டுவது குறித்தும் அல்லது இதனை முன்பிருந்தது போன்ற பழைய நிலைக்கே மீளக் கொண்டு வந்து அதைப் போன்றே புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட இயலுமா என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் (ஓய்வு) ஆர்.கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) சி.பழனிவேலு, தலைமை நகர்ப்புற திட்ட அலுவலர் மற்றும் தொன்மைக் குழுமத்தின் தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து, அக்குழு தனது அறிக்கையினை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இக்குழு, சென்னை பெருநகரில் உள்ள இதர தொன்மை வாய்ந்த அரசு கட்டடங்களை ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறிக்கை ஒன்றினை அளிக்கும்படியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இனி வருங்காலத்தில் அரசு கட்டடங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில் உள்ள தீயணைப்பு கருவிகளை காலமுறைப்படி பரிசோதனை செய்து, அவைகளை தீ விபத்துக்கள் ஏற்படும் சமயம் உபயோகிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அதேபோன்று, மின் சாதனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து இணைப்புகளையும் காலமுறைப்படி பரிசோதித்து, அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அவைகளை சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.