எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.2: தமிழகத்தில் ரூ.37 கோடி செலவில் 300 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று
அறிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 16 கோடி செலவில் தவிட்டு எண்ணெய் ஆலை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:-
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை வழங்குவதிலும், நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் சரியான அளவில், நியாயமான விலையில், தரமானதாக கிடைப்பதை உறுதி செய்வதிலும், நுகர்வோரின் குறைகளை களைவதற்கான அமைப்புகளை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கினை வகிக்கும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினை எனது தலைமையிலான அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதோடு, விலைவாசி உயர்விலிருந்தும் தமிழக மக்கள் ஓரளவு பாதுகாக்கப்படுகின்றனர்.
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினை மேலும் மேம்படுத்தும் விதமாக, கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் 114 பல்பொருள் அங்காடிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 23 அமுதம் பல்பொருள் அங்காடிகள் என மொத்தம் 137 அங்காடிகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பல்பொருள் அங்காடிகள் விரிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, 37 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 300 ‘அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்’ தமிழகமெங்கும் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான அரிசி ஆலைகளிலிருந்து தவிடு உப பொருளாக கிடைக்கிறது. தற்போது இந்த தவிடு,
ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் தனியாருக்கு விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய் தேவை அதிகரித்துள்ளதாலும், தவிட்டிலிருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாலும், நவீன அரிசி ஆலையிலிருந்து உப பொருளாகக் கிடைக்கும் தவிட்டிலிருந்து சமையல் எண்ணெய் தயாரிக்க திருவாரூர் மாவட்டத்தில் 140 மெட்ரிக் டன் திறன் கொண்ட தவிட்டு எண்ணெய் ஆலை 16 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தவிட்டு எண்ணெய் சமையல் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க, உப பொருளாகவும் பயன்படும். எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும்.
3. உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 552 கோடியே
80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5,53,950 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 116 சேமிப்பு கிடங்குகள் அமைக்க ஆணையிடப்பட்டு, இதுவரை 81,450 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 4.73 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமாக மேலும் கூடுதல் கிடங்குகள் அமைப்பதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு;
84,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 39 புதிய கிடங்குகள் 112 கோடியே
57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளின் கொள்ளளவு 8.36 லட்சம் மெட்ரிக் டன்னாக உயரும்.
4. விவசாயிகளின் நலன் காக்கும் பொருட்டு, காவேரி பாசனப் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமும், ஏனைய இடங்களில் கூட்டுறவு நிறுவனங்களும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்கின்றன. 2014-15 ஆம் ஆண்டிற்கு காவேரி பாசனம் அல்லாத பகுதிகளில் நெல் கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததை கருத்தில் கொண்டு; சென்ற ஆண்டு சூரிய ஒளி வாங்கி வசதி, நெல் தூற்றும் இயந்திரம் மற்றும் உலர் கலன் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு, அதற்கான கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இதே போன்று, நடப்பாண்டிலும், விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், விளைவிக்கும் இடங்களுக்கு அருகிலேயே 35 கோடி ரூபாய் மதிப்பில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் 75 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் காவிரி பாசனப் பகுதிகளிலும், இதர 25 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கட்டப்படும்.
5. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்திய உணவுக் கழகம் ஆகியவை கொள்முதல் செய்யும் நெல், கோதுமை ஆகியவற்றை சேமித்து வைக்கும் நிறுவனமாகவும், சிறு, குறு விவசாயிகளிடமிருந்து உணவு தானிய வகைகளான அரிசி, நெல், வேர்க்கடலை, பருத்தி, பருப்பு வகைகள், கம்பு, மக்காச் சோளம், கேழ்வரகு போன்ற விளை பொருட்களை விவசாயிகள் சேமித்து வைக்கும் நிறுவனமாகவும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் விளங்குகிறது. விவசாயிகள் மற்றும் வணிகர்கள், தங்களுடைய விவசாயப் பொருட்களை விஞ்ஞான ரீதியில் சேமித்து வைத்து தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு சரக்குக் கட்டணத்தில் 30 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் அனைத்து வங்கிகளிடமிருந்து 7 சதவிகித வட்டியில் விவசாயப் பொருட்களின் மதிப்பில்
75 சதவிகிதம் பொருள் இருப்பு மீதான கடனைப் பெறுவதை கிடங்குகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 36 கிடங்குகள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு,
தரச் சான்றிதழ் பெறப்பட்டு, மேற்படி கிடங்குகள் மூலம் மாற்றத் தக்க சேமிப்பு கிடங்கு ரசீதுகள், அதாவது Negotiable Warehouse Receiptsவழங்குவதை கிடங்குகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இருப்பு வைக்கும் பொருட்களுக்கு அனைத்து வங்கிகளிலும் மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகள் மூலம் கடன் வசதி பெற இயலும். மேற்படி மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகளை பெறுவதற்கு, பொருட்களின் தரம், ஈரத் தன்மை, வகைப்பாடு ஆகியவற்றை விஞ்ஞான ரீதியில் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே ஸ்ரீரங்கம், திருச்சி, திருவாரூர், ஈரோடு, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக் கூடங்கள் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.
6. தமிழக அரசு உணவு பாதுகாப்பை அளிப்பதுடன், உணவுப் பொருள்கள் தரமானதாக, உண்பதற்கு தகுதியானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்,
உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் கலப்படப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறியவும் தேவையான பயிற்சிகளை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்க ஏதுவாக ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் உள்ள 3.03 ஏக்கர் நிலம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி இடத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில், Centre for Consumer Education Research, Teaching, Training and Testing நிறுவனம் ஓர் ஆய்வகத்தை கட்டுவதற்காகவும், பயிற்சி அளிப்பதற்காகவும் 10 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் 14,750 சதுர அடி நிலப்பரப்பில், கட்டடம் கட்டுவதற்கான கருத்துரு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின், ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு தமிழக அரசின் பங்கீடாக
40 சதவிகிதத் தொகையான 4 கோடியே 12 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், குறைந்த விலையில், நிறைவான மற்றும் தரமான சேவையினை பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் பெற வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.