முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கைது: சிபிஐ அதிரடி

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை - ஆக. 27 - தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான எம்.ஏ.எம் ராமசாமி லஞ்சம் கொடுத்தாக வந்த புகாரின் பேரில் அவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கம்பெனிகள் பதிவாளராக இருப்பவர் மனுநீதிச் சோழன். இவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனபுதிய கம்பெனி தொடங்குவதற்காக கம்பெனிகள் பதிவாளரான மனுநீதி சோழனுக்கு, தொழிலதிபர் ராமசாமி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தங்களுக்கு வந்த புகாரையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் தொழிலதிபர் ராமசாமி மற்றும் மனுநீதிசோழனையும் கைது செய்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம். ராமசாமி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்