முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதி: முதல்வர் வழங்கினார்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 29 - முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், பணியின் போது உயிரிழந்த காவல் துறை உதவி ஆய்வாளர் வி. ரவிச்சந்திரன் மனைவி திருமதி ஜீவா அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், திருவேற்காடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வி. ரவிச்சந்திரன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது கண்டெய்னர் லாரி மோதி உயிரிழந்தார்.

இந்த துயரச் செய்தியை அறிந்ததமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன் உயிரிழந்த வி. ரவிச்சந்திரன் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டிருந்தார்கள்.

பணியின் போது உயிரிழந்த திருவேற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்

வி. ரவிச்சந்திரன் அவர்களின் மனைவி திருமதி ஜீவா முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேற்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், , தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்