எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, செப் 16:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5,200 பேர் முதல்வர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, மார்க்சிஸ்ட் க ம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. நெல்லை அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட்ட புவனேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜகவை சேர்ந்த வெள்ளையம்மாள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றதால் புவனேஸ்வரி ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் அந்தோணி கிரேஸை ஆதரித்து அவர் நகரின் முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினையில் பாரதீய ஜனதா இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். பின்னர் நேற்று அவர் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகருக்கு சென்னையில் இருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்டு சென்றார். கோவை விமான நிலையத்தில் அவரை அமைச்சர் வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். துணை சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வேன் மூலமாக புறப்பட்டார். அப்போது வழிநெடுக பொதுமக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். பொதுக்கூட் ட மேடைக்கு செல்லும் வழியில் கட்சி கொடிகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. வழிநெடுக சண்டை மேளம் மற்றும் நாதஸ்வரம் முழங்க முதல்வருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவிற்கு மகளிர் அணியினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர். சில இடங்களில் பொதுமக்கள் பால்குடம் ஏந்தியும் வரவேற்றனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் இன மக்கள் தங்களது பாணியில் நடன மாடி முதல்வரை வரவேற்றனர். வழி எங்கும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு முதல்வரை வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். முதல்வரும் பதிலுக்கு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறே சென்றார். பின்னர் கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழா மலரையும் அவர் வெளியிட அமைச்சர் வேலுமணி அதை பெற்று கொண்டார். பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற முதல்வர் ஜெயலலிதாவை அங்கு திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அவர்களை பார்த்து இரு விரல் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர். இந்த கூட்டத்தில் முதல்வருக்கு அமைச்சர் வேலுமணி வீரவாளை நினைவு பரிசாக வழங்கினார். முதல்வர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5,200 பேர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா பாஜக வேட்பாளர்கள் வாபஸ் பெறுவது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். அதாவது தோல்வி பயத்தால்தான் பாஜக வேட்பாளர்கள் வாபஸ் பெறுகிறார்கள். ஆனால் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள். எங்களை பொறுத்தவரை மக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் தயார் என்று குறிப்பிட்ட முதல்வர் பாஜக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்று குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
06 May 2024புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.