எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.அக்.2 - சத்தியமூர்த்தி பவனில் காமராஜர்-சத்தியமூர்த்தி ஆகியோரின் சிலைகள் திறக்கப்பட்டது. இதில் கேரளா முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலையும், விடுதலை வீரர் சத்தியமூர்த்தியின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
காமராஜர், சத்தியமூர்த்தி சிலைகள் திறப்பு விழா மற்றும் ராஜீவ்காந்தி அரங்கம் திறப்பு விழா நேற்று முன்தினம்மாலை கட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், வி.நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன் மற்றும் விஜயதாரணி எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேரள மாநில முதல்வர்உம்மன்சாண்டி, பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்துவைத்தார். பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சத்தியமூர்த்தி சிலையை திறந்துவைத்தார். ராஜீவ்காந்தி பெயர் பலகையை குமரி அனந்தன் திறந்து வைத்தார்.
விழாவில், கேரளா மாநில முதல்வர் உம்மன்சாண்டி பேசியதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் அரசியல் வானில் ‘கிங் மேக்கர்’ ஆக விளங்கினார். உண்மையான, சிறந்த தலைவர். அனைத்து தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குபவர். கேரளா-தமிழகத்துக்கு இடையே நல்ல உறவை வளர்த்தவர். பொதுவாழ்வில் எளிய வாழ்வை வாழ்ந்தவர். அந்தவகையில் அவர் சிலையை திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலவச கல்வி, மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர்.இன்று அரசியலுக்கு வருபவர்கள் அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது. இதற்கு எந்த தனிநபரையும் குற்றம் சாட்டக்கூடாது. கட்சியை பலப்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் தோல்வியில் இருந்து மீண்டு எழும்.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அண்டை மாநிலங்களும் அமல்படுத்தும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசியதாவது:-
இன்றைக்கு குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி பேசுகிறார்கள், ஆனால் வளர்ச்சிக்கான மாதிரியை காமராஜர் அன்றைக்கே தமிழகத்தில் உருவாக்கி காட்டியவர். மத்திய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஏராளமான பள்ளிகளை உருவாக்கி இருக்கிறோம். உணவு பாதுகாப்பு சட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை எதிர்த்த பா.ஜ.க., தற்போது எங்கள் திட்டங்களைதான் செயல்படுத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஆனால் இதை அவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்கள். மங்கள்யான் உள்பட அனைத்து திட்டங்களின் வெற்றிக்கும் காங்கிரஸ்தான் காரணம். இதை யாரும் பங்குபோட முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் கட்சி கட்டுகோப்புடன் விளங்குகிறது. இங்கே கூடியிருக்கும் கூட்டம் இன்றைய அரசியல் சூழலுக்கேற்ப எதையும் செய்யும் கூட்டம். பெருந்தலைவருக்காக கூடிய கூட்டம். காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதற்காக இந்த நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். வெறும் உதட்டளவில் மட்டும் ஒற்றுமையை காட்டாமல், முழு உணர்வுடன் நாம் உறுதி ஏற்க வேண்டும். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு நாம் உழைக்க வேண்டும். மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் காமராஜரின் ஆட்சியை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் பேசும்போது, ‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கொண்டதில் இருந்து நான் ஒரு நீதிபதியை போல் செயல்பட்டு கொண்டு இருக்கிறேன். நாளை விடிவது நமக்கே என்று எண்ணி ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் உழைத்தால், காமராஜர் ஆட்சியை நம்மால் அமைக்க முடியும்’ என்றார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் கோவை தங்கம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.