எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 4 - கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பை உறுதி செய்து இருக்கிறார். தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கூறி இருக்கிறது. இந்த அணுமின் நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு கொண்டது என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். எனவே போராட்டம் நடத்துபவர்கள் இதை ஏற்று போராட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பணம் செலவு செய்வதாக புகார் கூறப்பட்டது. இதுபற்றி நடந்த விசாரணையில், வாகனங்களில் மக்களை அழைத்து வருவது, உணவு வழங்குவது போன்றவற்றுக்காக ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த பணம் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுவதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 12 தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. கணக்கு தணிக்கையின்போது 6 அமைப்புகளின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதில் 3 நிறுவனங்கள் பணத்தை முறைகேடாக செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 3 நிறுவனங்கள் மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளை சி.பி.ஐ.யும், 2 வழக்குகளை தமிழக அரசும் பதிவு செய்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் அணு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் அணு உலை மூலம் தயாராகிறது. சீனாவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பிரான்சில் 68 சதவீதமும், ஜப்பானில் 26 சதவீதமும், ரஷ்யாவில் 20 சதவீதமும், தென்கொரியாவில் 10 சதவீதமும் அணு உலை மூலம்தான் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 20 அணுமின் உலைகள் உள்ளன. இதில் 19 உலைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் 4 ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவீதம்தான். பாகிஸ்தானில் சீனா உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ராஜஸ்தான், கர்நாடகா, அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. சூரிய ஒளி மூலம் 1 யூனிட் மின்சாரம் தயாரிக்க 16 ரூபாய் செலவாகிறது. அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்க 3 ரூபாய் 60 காசும், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க 6 ரூபாயும் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் மூலம் மின்சாரம் தயாரிக்க 2 ரூபாய் 45 காசுதான் செலவு ஆகிறது. அணுமின் நிலையம் பாதுகாப்பானது. குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டுக்கு அணு மின்சாரம் மிகவும் அவசியம் என்று எடுத்துக் கூறியபோதும் உள்நோக்கத்துடன் நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தியவர்கள் மீது 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் பிரச்சினை. இதில் மத்திய அரசு தலையிடாது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை குறிப்பு பற்றி மத்தியமாநில அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல் படத்தொடங்கும். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சுற்றுலா விசாவுடன் தமிழ் நாட்டுக்கு வந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்தது. அவர் கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அவருடைய லேப்டாப் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது லேப்டாப்பில் கூடங்குளம் அணுஉலை படம் இருந்தது. மேலும் தேவைப்பட்டால் அவரை அழைத்து வந்து விசாரிப்போம். போராட்டம் காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையும் இதுதான். நானும் மத்திய மந்திரி ஜி.கே. வாசனும் இதுபற்றி பிரதமரிடம் கூறி இருக்கிறோம். இலங்கையில் மட்டும் அல்ல உலகில் எந்த பகுதியில் மனித உரிமை மீறப்பட்டாலும் மத்திய அரசு அதை எதிர்க்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். பேட்டியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடன் இருந்தார். அவரும் இதே கருத்தை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.