முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.11/2 கோடி போதை பொருள் கடத்தல் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 பேர் கைது

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச் - 5 - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திருச்சியிலிருந்து ரயில் மூலம் டெல்லிவழியாக மலேஷியாவுக்கு ரூ.11/1 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற 3 பேரை சுங்கத்துறையினர் மடக்கி பிடித்தனர்.இது பற்றி விபரம் வருமாறு:- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக டெல்லிக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.   அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சுற்றி திரிந்த 3 பேர் சிக்கினர். அவர்களது பெயர் பாலுசாமி (52), அக்பர்அலி (45), ஜாபர் அகமது (35) என்பது தெரியவந்தது. திருச்சியை சேர்ந்த இவர்கள் 3 பேரும் சூட்கேசின் அடிப்பாகத்தில் மறைத்து வைத்து, 6 கிலோ மதிப்பிலான எபிடிரின் என்ற போதைப்பொருளை கடத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 1/2 கோடியாகும்.  இதைத்தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருச்சியில் இருந்து கடத்திவரப்பட்ட இந்த போதை பொருளை டெல்லிக்கு கொண்டு சென்று அங்கிருந்து மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த 3 பேரும் திட்டமிட்டது தெரியவந்தது.இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்