முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் கறை படிந்த காவல் ஆணையரை பாதுகாக்கிறார் மம்தா: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, கொல்கத்தா காவல் ஆணையர் ஊழல் கறை படிந்தவர். அவரை பாதுகாக்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

 மேற்குவங்கத்தின் புருலியாவில்   பா.ஜ.க பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் தொடர்புடைய கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஊழல் கறை படிந்தவர். அவருக்கு ஆதரவாக முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் பல்வேறு ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அந்த ரகசியங்கள் வெளிவந்துவிடக்கூடாது என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அஞ்சுகிறது. கடந்த ஆண்டு துர்கா பூஜையின்போது சிலைகளை கரைக்க மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது. அதேநேரம் மொகரம் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி வழங்கியது. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து