முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம்

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறும் போது, புல்வாமாவில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. அது குறித்த அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தான் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால்டன், ராணுவ மந்திரி மைக்பாம்பியோ, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோரும் பேட்டி அளித்தனர். அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தனர். ஜெய்ஷ் இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக்க ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து