எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 24 - டி.ஜெயக்குமார், வி.பி.கலைராஜன், சைதை துரைசாமி, பழ.கருப்பையா, ஜே.சி.டி.பிரபாகரன்,கோகுலஇந்திரா, வளர்மதி உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் சென்னையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன்படி சென்னையில் நேற்று வேட்புமனுக்கலை தாக்கல் செய்தவர்கள் விவரம் வருமாறு:
ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார், மூலகொத்தளத்தில் உள்ள மாநகராட்சி 2வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சுந்தரவள்ளியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அ.தி.மு.க. பகுதி செயலாளர் பழனி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ராஜரத்தினத்திடம் பகல் 11 மணிக்கு மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா எம்.பி., பகுதி செயலாளர் வெற்றிநகர் மு.சுந்தர், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் வசந்த ராமன், பகுதி செயலாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மனுதாக்கல் செய்ய வந்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏ.எஸ். முருகன், ஜெகதீசன், ஐ.சி.எப். உதயகுமார், வெற்றி துரைசாமி, மெய்யப்பன், வேலு, சாரதி, லில்லி, சந்திரன், நைனியப்பன், கடும்பாடி, சந்திரசேகர் உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அப்போது புரட்சித் தலைவி வாழ்க, வெற்றி உறுதி என்று கோஷமிட்ட னர்.
மனுதாக்கல் செய்த பின் சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை தேர்வு செய்துள்ளார். நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பம். எனவே இந்த தொகுதி மக்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பார்கள். எங்களுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும், 350க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளிக்கின்றன. எனவே எங்கள் கூட்டணி பலமான கூட்டணி.
தமிழ்நாடு முழுவதும் அமோக ஆதரவு பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்அமைச்சர் ஆவார். தற்போதைய ஆட்சி மாறும். கொளத்தூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேள்வி: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி எப்படி இருக்கும்?
பதில்: அ.தி.மு.க. வெற்றி யில் எந்த சந்தேகமும் இல்லை. அம்மா என்ற சக்தி சுனாமியாக இருக்கும்போது எந்த சக்தியும் தடையாக இருக்காது.
இவ்வாறு சைதை துரைசாமி கூறினார்.
மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த அவருக்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். ஏராள மானோர் அவருக்கு கை குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அண்ணாநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திரா, nullந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி 5வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருடன் பொன்னையன், வ. சுகுமார் பாபு மற்றும் ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். வேட்பு மனுதாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கோகுல இந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைய தினம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏழைஎளியோரின் நலனில் அக்கறை கொண்டு சிறப்பானதொரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். மாணவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயி கள், வியாபாரிகள் போன்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உள்ளது. நான் அண்ணாநகர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வெற்றியை ஜெயலலிதா காலடியில் சமர்ப்பிப்பேன். அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நான் தங்கி இருப்பதால் உடனுக்குடன் மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பேன். அண்ணாநகர் தொகுதி மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு கோகுல இந்திரா கூறினார்.
ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா. வளர்மதி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி அன்பழகனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் நுங்கைமாறன், தே.மு.தி.க. பகுதி செயலாளர் கோவிந்தன், மனிதநேய மக்கள் கட்சி பகுதி செயலாளர் அன்சார், சிவராஜ், முருகேசன், ரமேஷ், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.
வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரன் எழும்nullர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உள்ள சிப்காட் அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி சம்பத்குமாரிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் பாலன், தே.மு.தி.க. செயலாளர் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஏழுமலை, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் வாஹீது பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தமிழன் சைதாப்பேட்டை மண்டல அலுவலகம் சென்று தேர்தல் அதிகாரி பன்னீர் செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மைத்ரேயன் எம்.பி., பகுதிச் செயலாளர் என்.எஸ். மோகன், வக்கீல் பாலசுப்பிரமணியன், விஜயராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.
தியாகராயநகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கலைராஜன் கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமி, மயிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மயிலை பகுதி செயலாளர் ஜெயசந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திரு.வி.க.நகர் (தனி) தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வ.நீலகண்டன், புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி விசாகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தே.மு.தி.க. பகுதி செயலாளர் லிங்கம், அ.தி.மு.க. பகுதி செயலாளர் சுகுமார், முன்னாள் கவுன்சிலர் வீரமணி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.வெற்றிவேல் தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே உள்ள 1வது மண்டல அலுவலரிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அப்போது அவருடன் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பகுதி செயலாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவும் நேற்று வேட்புமனு தாக்கல்செய்தார்.
வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.அசோக், சென்னை எழிலகத்தில் தேர்தல் அதிகாரி கார்பிலினிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் சுரேஷ், முருகன், வழக்கறிஞர் கேசர், காளின்ஸ் உடனிருந்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. வேட்பாளர்கள் கு.நல்லதம்பி(எழும்பூர்), ப.பார்த்தசாரதி(விருகம்பாக்கம்) ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான நிவாரண நிதி வழக்கு: தமிழக அரசு கோரிக்கை குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில்
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024