எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத் : ஐதராபாத்தில் இன்று நடக்கும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை அணியை விழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
‘பிளேஆப்’ சுற்று
12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கியது. ‘லீக்‘ ஆட்டங்கள் கடந்த 5-ம் தேதி முடிவடைந்தது. இதன் முடிவில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
‘குவாலிபையர்-1’
‘பிளேப் ஆப்’ சுற்று கடந்த 7-ம் தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. விசாகப்பட்டினத்தில் 8-ம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து வெளியேற்றியது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று இறுதிப்போட்டி...
நேற்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே ஐ.பி.எல். கோப்பையை 3 முறை வென்று உள்ளன. இதனால் 4-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
3 முறை தோல்வி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணி 8-வது முறையாகவும், மும்பை அணி 5-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தாலும் மும்பையிடம் 3 முறை தோல்வியை தழுவியது. இரண்டு ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் சரண்டர் ஆகி இருந்தது.
பழி தீர்க்குமா சென்னை?
இதற்கு இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பழி தீர்த்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்த அனைத்து துறைகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) சிறப்பாக செயல்பட்டு கடுமையாக போராட வேண்டியது அவசியமாகும். முதல் தகுதி சுற்றில் சென்னை அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதில் இருந்து மீண்டு 2-வது தகுதி சுற்றில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வாட்சன் - டோனி...
கேப்டன் பதவி மற்றும் பேட்டிங்கில் டோனி நல்ல நிலையில் உள்ளார். அவர் 14 ஆட்டத்தில் 414 ரன் எடுத்து உள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். ஸ்டிரைக்ரேட் 137.54 ஆகும். ரெய்னா 375 ரன்னும், டுபெலிசிஸ் 370 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். வாட்சன் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே. டெல்லி அணிக்கு எதிராக அவர் அதிரடியை வெளிப்படுத்தினார். வாட்சன் 2 அரை சதத்துடன் 318 ரன்னும், அம்பதி ராயுடு 281 ரன்னும் எடுத்து உள்ளனர்.
முரளி விஜய்க்கு...
சி.எஸ்.கேயின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் 24 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 16 விக்கெட்டும், ஜடேஜா 15 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். 3 பேரும் சேர்ந்து 55 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் 19 விக்கெட் கைப்பற்றி நல்ல நிலையில் உள்ளார். நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 2-வது வேகப்பந்து வீரரை (ஷர்துல்தாக்கூர்) சேர்த்ததில் எந்த பலனும் இல்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் என்ற முறையில் முரளி விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து டோனி முடிவு செய்வார்.
4-வது முறையாக...
சென்னை அணியை 3 முறை வீழ்த்தி இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. அந்த அணி மீண்டும் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து 4-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. மும்பை அணியில் வெற்றியை நிர்ணயம் செய்யக்கூடிய பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இது அந்த அணியின் பலமே. பேட்டிங்கில் குயின்டன் டி காக் (4 அரை சதத்துடன் 500 ரன்), சூர்யகுமார் யாதவ் (409), கேப்டன் ரோகித் சர்மா (390), இஷான்கிஷன் ஆகியோரும், பந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), மலிங்கா (15), ராகுல் சாஹர் (12), குணால் பாண்ட்யா (11) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
ஹர்திக் பாண்ட்யா...
ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்த்திக் பாண்ட்யா, போல்லார்ட் முத்திரை பதிக்க கூடியவர்கள். ஹர்த்திக் பாண்ட்யா 386 ரன் குவித்துள்ளார். 14 விக்கெட் கைப்பற்றி உள்ளார். புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த வலுவான அணிகள் மோதுவதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ