முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      இந்தியா
Image Unavailable

ஈடாநகர் : அருணாச்சலப்பிரதேசத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் என்.பி.பி கட்சி எம்.எல்.ஏ உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.

அருணாச்சலப்பிரதேசத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் என்.பி.பி கட்சி எம்.எல்.ஏ உட்பட அவரது குடும்பதினர் 7 பேர் பலியாகியுள்ளனர். அருணாச்சலபிரதேசத்தின் மேற்கு கோன்ஸா பகுதியில் நேற்று மதியம் இந்த தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் என்.பி.பி கட்சி எம்.எல்.ஏ திராங் அபோ உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியாகியுள்ளனர்.

என்.எஸ்.சி.என் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு என்.பி.பி கட்சி தலைவரும், மேகாலயா மாநில முதல்வருமான கான்ராட் ஷர்மா  கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து