முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 28 மே 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நேட்டோ படை வீரர்களின் உதவியோடு வான்வழியாகவும், தரைவழியாகவும் அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கந்தகார் மாகாணத்தின் காக்ரிஸ் மாவட்டத்தில் உள்ள தலிபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை சுற்றி வளைத்து ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பல மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் 2 பேர் உள்பட 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 7 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து