முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவ - மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவு: 'என்ஜினீயரிங்' படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியீடு - தமிழக அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 19 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மாணவ - மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து  'என்ஜினீயரிங்'  படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

ஆன்லைன் மூலம்...

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மே 2-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது.

கூடுதலாக ஒருநாள்...

இதன்பின்பு, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள 46 மையங்களில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சரிபார்க்கப்பட்டது. ஏற்கனவே வெளியிட்ட அட்டவணைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு 6-ம் தேதி தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களுக்காக சான்றிதழ் சரிபார்ப்பு 7-ம் தேதி தொடங்கியது. அதேபோன்று, சான்றிதழ் சரிபார்ப்புக்காக கூடுதலாக ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்று வெளியீடு...

46 மையங்களில் சரிபார்க்கப்பட்ட அனைத்து மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை உயர்மட்ட கண்காணிப்பு குழு சரிபார்க்க வேண்டியது உள்ளதால் ரேங்க் பட்டியல் 20-ம் தேதி (இன்று) வெளியிடப்படும். இந்த ரேங்க் பட்டியல் 4 நாட்கள் மாணவ-மாணவிகளின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த பட்டியல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 044-22351014 அல்லது 044-22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து