எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, ஏப்ரல்-15 - தேனி மாவட்டம், ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழா மற்றும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாண்புமிகு நிதிஅமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 872 பயனாளிகளுக்கு ரூ.51,87,956 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாக்களில் கலந்து கொண்டு நிதிஅமைச்சர் பேசுகையில், தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்தில் இன்று நல்லாட்சி நடைபெற்று வருகிறது. அனைத்து நலத்திட்ட உதவிகளும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன், சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு ஒவ்வொரு திட்டத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத எண்ணற்ற பல திட்டங்களையும் அறிவித்து அதனையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார்கள். ஏழை-எளிய மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் ஒவ்வொரு திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள ஏழை குடும்பத்தினரும் பயனடையும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை ரூ.500 லிருந்து ரூ.1000 மாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டு, முதியோர்களின் வாழ்வை சிறக்கச் செய்துள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதியோர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தான் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏழை பெண்களின் திருமணத்திற்கு, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் அத்துடன் 4 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டப்படிப்பு, பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அத்துடன் 4 கிராம் தாலிக்கு தங்கமும், வழங்கிட உத்தரவிட்டு ஏழை பெண்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளார்கள். மாணவ-மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில அவர்களுக்கு ஊக்கத்தொகையும் கணினியும் வழங்கப்படுகிறது. ஏழை விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட ஒரு குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத எண்ணற்ற பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும், விவசாய பொதுமக்களும் ஏதாவது ஒரு தமிழக அரசு திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். முன்னதாக மாண்புமிகு தமிழக நிதிஅமைச்சர் அவர்கள் வேளாண்மைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சிகளை பார்வையிட்டார்.
தமிழக முதல்வர் அவர்கள் விவசாயத் தொழிலில் ்டுபட்டு வரும் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கு கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டம் என்னும் உன்னத திட்டத்தை தீட்டி தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சிக்காலத்தில் விவசாயத்திற்கு 70 சதவிகித அளவில் முக்கியத்துவம் அளித்து விவசாயத்துறைக்கென்று பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3804 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்து பனிரெண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகளுடன் தமிழகத்தை உருவாக்கிட திட்டம் வகுத்துள்ளார்கள். வருங்கால இளைய தலைமுறையினர் பயன்பெறும் வகையில் தாயுள்ளத்தோடு பல திட்டங்கள் வடிவமைத்து அதனை நடைமுறைப்படுத்த தமிழகம் அனைத்து நிலையிலும் ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்களை தீட்டி வருகிறார். தேனி மாவட்டத்தில் பின்தங்கிய போடிநாயக்கனுனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல சொக்கநாதபுரத்தில் அரசு பொறியியற்கல்லூரி உருவாகிட ஆணை பிறப்பித்து இந்த கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் அதற்காக ரூ.94 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் மேலை நாடுகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்திட தமிழக முதலமைச்சர்; போதிய நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். கல்விக்கும், வேளாண்மைத்துறைக்கும் முதல்வர் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக விளங்கிட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திட திட்டங்களை அறிவித்து சாதனை படைத்து வருகிறார்கள். அம்மா அவர்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் பொதுமக்களாகிய உங்களது ஆதரவு தொடர்ந்து இருக்க கேட்டுக்கொள்கிறேன். தேனி மாவட்டம், ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழா நிகழ்ச்சியில் 28 நபர்களுக்கு வேளாண்மை துறை நலத்திட்ட உதவிகளும், 844 பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் என்று ஆக மொத்தம் 872 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 87 ஆயிரத்து 956 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு நிதிஅமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் கிராமப்புற ஏழைகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஆடுகளை நல்லமுறையில் ஆடுகள் வளர்த்த 15 பயனாளிகளுக்கு முதல்பரிசாக ரூ.3000, 2-ம் பரிசாக ரூ.2,500, 3-வது பரிசாக ரூ.2000 மற்றம் ரூ.1000 வீதம் 12 பேருக்கு ஆறுதல் பரிசாக ஆடுகளுக்கான உணவுப் பொருட்களை மாண்புமிகு நிதிஅமைச்சர் வழங்கினார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடிப்படையாக திகழும் வேளாண் தொழிலை மேம்படுத்தி தமிழ்நாட்டில் 2-ம் பசுமை புரட்சியை ஏற்படுத்திட நவீன ஆராய்ச்சி, புதிய பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், துல்லிய பண்ணையம் மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற உக்திகளை கையாளுதல், அதிக வருவாய் ்ட்டும் மாற்றுப்பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல், தரமான இடுபொருட்களை உரிய நேரத்தில் விநியோகித்தல், புதிய உத்வேகத்துடன் கூடிய விரிவாக்க முறைகளை பின்பற்றுதல், பண்ணை இயந்திரமயமாக்குதல், தொழில்நுட்ப பயன்பாட்டில் செயல்திறன்கள் அதிகரிப்பு, அறுவடைக்கு பின் செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் என அனைத்து மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார். தமிழக முதல்வர் அவர்கள் பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு திட்டங்களும் தீட்டப்பட்டு நடைமுறை படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் விவசாயிகளை கருத்தில் கொண்டு உழவர் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடத்தி, அந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து விவசாய பெருமக்களுக்கும் அறுசுவை உணவு அளித்து, விவசாயத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப. அவர்கள் தலைமை உரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.விஜயாராணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.செல்லத்துரை, கம்பம் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் செல்லமுத்து, போடிநாயக்கனுனூர் நகர்மன்ற தலைவர் பழனிராஜ், சின்னமனுனூர் நகர்மன்ற தலைவர் சுரேஷ், தேனி நகர்மன்ற தலைவர் முருகேசன,;; துணைத்தலைவர் காசிமாயன், முன்னாள் தேனி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், உத்தமபாளையம் ஒன்றிய குழுத்தலைவர் தீபாவளிராஜ், தேனி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அம்சகோமதி, துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஸ்ரீரெங்காபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி வெங்கட்டம்மாள், ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் திருமதி.சங்கீதா இளங்கோவன், சின்னமனுனூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாண்டியராஜ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.