எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமென்ற தவறான நோக்கத்தோடு திட்டமிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கின்றார்கள் என்று மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் 187 ஆணவக் கொலைகள் நடந்திருக்கிறதே?
பதில்: இதிலெல்லாம் தக்க நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. எல்லா ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடக்கின்றது. இதை கட்டுப்படுத்துவதற்காக அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: நீட் தேர்வைப் பொறுத்தவரை நடந்தது என்ன?
பதில்: நீட் தேர்வைப் பற்றி பலமுறை பேசிவிட்டோம்.
கேள்வி: ஸ்டாலின் அந்தக் கருத்தை ஏற்க மறுத்து வெளிநடப்பு செய்திருக்கிறாரே?
பதில்: ஏற்கனவே 2010-ல் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுதுதான் இந்த நீட் தேர்வுக்கே அடித்தளம் போட்டார்கள். மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருக்கின்ற பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலே ஆட்சியில் பங்கு பெற்றிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் தான் இந்த நீட் தேர்வே வந்தது. இதற்குக் காரணமே காங்கிரஸ் ஆட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான். இப்பொழுது மக்களிடத்திலிருந்து எதிர்ப்பு வந்த காரணத்தினால், எப்படியாவது அதிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்று அந்தப் பழியை எங்கள் மீது சுமத்துவதற்காக திருப்பி விடுகிறார்கள். தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
கேள்வி: டிடிவி தினகரன் எதையும் சந்திப்பேன் என்று சொல்லி விட்டு இப்பொழுது வேலூர் தேர்தலில் பின்வாங்குகிறார். அ.தி.மு.க. ஆளுமையை கண்டு அச்சப்படுகிறாரா?
பதில்: அதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும். அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை தேர்தல் முடிவில் அவரே தெரிந்து கொண்டார், அதனால் விலகி இருக்கிறார்.
கேள்வி: ராஜ்யசபா தேர்தலுக்கு சீட் கொடுக்கவில்லை என்பதால் சிலர் விரக்தியில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
பதில்: ஏற்கனவே கூட்டணி அமைக்கின்ற பொழுதே, தேர்தல் உடன்படிக்கையின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடமும், மீதி இரண்டு இடங்களில் ஒன்றை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்ததினால், அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு ஒதுக்கியிருக்கிறோம். அவர் மேட்டூர் நகர கழக செயலாளராக சுமார் 18 ஆண்டு காலம் இருந்திருக்கிறார். இப்படி கட்சியில் நிர்வாகியாக இருந்தவர். அதே போல, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது, அவருக்கும் இந்த தேர்தலில் கொடுத்திருக்கின்றோம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய பெருமக்களுக்கு போட்டியிடுகின்ற ஒரு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் கூட்டணி ஏற்பட்ட காரணத்தினாலே இப்பொழுது குறையைப் போக்குவதற்காக இஸ்லாமிய மதத்திலிருந்து ஒருவருக்கு ஏற்கனவே அமைச்சராகவும், நகர செயலாளராகவும் பல்லாண்டு காலம் கட்சியிலே உழைத்தவர். அப்படி அனுபவம் வாய்ந்த ஒருவருக்குத்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வழங்கியிருக்கிறோம்.
கேள்வி: காவிரியின் குறுக்கே அணை கட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்: ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, எந்த அணையும் கட்டக்கூடாது என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். 15 ஆண்டு காலத்திற்கு யாரும் மேல்முறையீடு செய்யக் கூடாது, எந்த ஒரு அணையும் கட்டக் கூடாது, அங்கே வருகின்ற தண்ணீரை தடுத்து வேறு பக்கம் திருப்பக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் யாரும் அங்கே அணை கட்ட இயலாது.
கேள்வி: சேலம் எட்டு வழிச்சாலை சார்பாக பார்த்திபன், நிதின் கட்காரியைப் பார்த்து எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்திருக்கிறார்...
பதில்: இது மத்திய அரசின் திட்டம், மாநில அரசின் திட்டம் அல்ல என்று பலமுறை ஊடகத்தின் வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் தெரிவித்து விட்டேன். எட்டு வழிச்சாலை ஒரு விரைவுச் சாலை, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்கள், அதற்குப் பிறகு கேரளத்தில் கொச்சின் வரை இந்த சாலை செல்கிறது. ஏதோ சேலத்திற்கு வருவதைப் போல நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சாலை சேலம் வழியாக செல்கிறதேயொழிய, சேலத்திற்காக இந்த சாலை அமைக்கப்படவில்லை. ஆகவே, சேலத்திலிருந்து சென்னை வரை சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகிறது. இதன் மூலம் எரிபொருள் மிச்சமாகிறது, வாகனங்களின் மாசு குறைகிறது. 2001-ல் சாலை அமைத்தார்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 19 ஆண்டு காலத்தில் மூன்று மடங்கு வாகனப் போக்குவரத்து அதிகமாகியிருக்கிறது.
இப்பொழுது வாகனங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் அதற்கேற்ற சாலையை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. உயிர்ச்சேதம், விபத்து ஆகியவற்றை தவிர்ப்பதற்காகவும், விரைந்து செல்வதற்காகவும், எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காகவும், பயண தூரம் குறைவதால் டீசல், பெட்ரோல் மிச்சப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதாலும் மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது. அதுமட்டுமல்லாமல், ராணுவத் தளவாடங்கள், இராணுவத்திற்குத் தேவையான உதிரி பாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்பதாக சொல்லியிருக்கின்றார்கள், அதற்கும் இந்த பசுமை வழிச் சாலையை அமைப்பது உதவிகரமாக இருக்கும்.
மேலும், புதிய தொழில்கள் வருவதற்கும் உதவிகரமாக இருக்கும். உட்கட்டமைப்பு சிறந்திருந்தால்தான் வெளிநாட்டிலிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் அதிகளவில் தொழில் முதலீடு செய்வதற்கு வருவார்கள். இவ்வளவு விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டு தான் இந்தச் சாலையை மத்திய அரசு அமைக்கின்றது. ஆனால், இதை பலர் எதிர்க்கின்றார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொழுது 734 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைத்த பொழுது, மக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தவில்லையா? அ.தி.மு.க. அரசு மாநிலத்தில் ஆட்சி செய்கிறது, மத்திய அரசு தான் இந்தத் திட்டத்தை கொண்டு வருகிறது. அப்பொழுது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சாலை அமைக்கவில்லையா? இந்தத் திட்டம் வந்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமென்ற தவறான நோக்கத்தோடு, வேண்டுமென்றே திட்டமிட்டு இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள். இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும்பொழுது, விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகை கொடுக்கின்றார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் பொழுது, நிலத்தில் வீடு கட்டியிருந்தால், அந்த வீட்டிற்கு உண்டான இழப்பீட்டுத் தொகை கழித்துத் தான் இழப்பீட்டுத் தொகை கொடுத்தார்கள். தற்போது, உதாரணத்திற்கு, 10 வருடத்திற்கு முன்பு ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட வீடாக இருந்தாலும், ஆயிரம் சதுர அடிக்கான தொகையை கொடுக்கின்றார்கள். ஒரு ஏக்கருக்குக் கீழ் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் அவர்களுக்குத் தேவையான 10 சென்ட் இடத்தைக் கொடுத்து, அரசாங்கமே வீடு கட்டிக் கொடுக்கின்றது, இழப்பீட்டுத் தொகையும் கொடுக்கின்றது. கடந்த காலங்களில் இழப்பீட்டுத் தொகை குறைவாக இருந்தது. இப்பொழுது புதிய இழப்பீட்டுச் சட்டத்தின் வாயிலாக கிட்டத்தட்ட மூன்று மடங்கு கூடுதலாகக் கொடுக்கின்றோம். கடந்த காலங்களில் தென்னை, மா மரங்களுக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகையே கொடுத்துள்ளார்கள். இப்பொழுது, 15 வருடம் ஆயுட்காலம் உள்ள ஒரு தென்னை மரத்திற்கு ரூபாய் 35 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 40 ஆயிரம் வரை கொடுக்கின்றோம். ஒரு ஏக்கருக்கு 70 மரமிருந்தால் ரூபாய் 22 லட்சம் வரை மத்திய அரசு இழப்பீடாகக் கொடுக்கின்றது. கிணற்றில் பம்ப் செட் வைத்திருந்தால், அவர்கள் வேறு இடத்தில் நிலம் வாங்கினால், போர்வெல்லுக்கு உண்டான இழப்பீட்டுத் தொகை கொடுப்பதுடன், சிறப்புத் திட்டத்தின் வாயிலாக மின்சார இணைப்பு கொடுக்கின்றோம். மாட்டுக் கொட்டகைக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கின்றார்கள். எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்று கருதி தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்த நாங்கள் முயற்சி செய்தோம். இன்றைக்கு பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டிருக்கின்றது, அதை மத்திய அரசு சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
கேள்வி: வேலூரில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கின்றது?
பதில்: வேலூரில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த சண்முகம் போட்டியிடுகின்றார். உறுதியாக வெற்றி பெறுவார்.
கேள்வி: மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதே?
பதில்: 2.5 சதவிகிதம் தான் உயர்த்தியுள்ளார்கள். இதனால் தங்கம் வாங்குபவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அந்தளவிற்கு வசதி வாய்ப்பு இருப்பவர்கள் தான் தங்கத்தை வாங்குகின்றார்கள். தங்கத்தையே வாங்க முடியாத அளவிற்கு அடித்தட்டில் வாழ்கின்ற மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டுமேயொழிய மாநில அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, நசுக்கப்பட்ட கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்வதுதான் எங்களுடைய லட்சியம். அந்த இலட்சியத்தின் அடிப்படையில் தான் அ.தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.