எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு : தரமான கல்வியை வழங்குவதால், தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஈரோடு திண்டல் வேளாளர் கல்வி அறக்கட்டளை, வேளாளர் மகளிர் கல்லூரி பொன் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலர் சந்திரசேகர் வரவேற்றார். கலெக்டர் கதிரவன், அறக்கட்டளை தலைவர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பொன்விழாவை முன்னிட்டு வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தும், பொன்விழா மலரை வெளியிட்டும் பேசியதாவது,
இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்கினால்தான் மனித வளம் மேம்பட்டு, தொழில் திறன் உயர்ந்து நாட்டின் பொருளாதாரம் உயரும், சமூகம் மேம்படும் என அம்மா வலியுறுத்துவார். அதன்படி தமிழகத்தில் 13 மாநில பல்கலைக் கழகங்கள், 829 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 718 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், 585 இன்ஜினியரிங் கல்லூரிகள், 520 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
தமிழகத்தில் மாணவர்களுக்கு உயர்தர கல்வியுடன் அடிப்படை வசதி, சலுகை, உதவித் தொகை, ஆராய்ச்சிக்கான வாய்ப்பு, இலவச விடுதி என தேவையான வசதிகள் வழங்கப்படுகிறது. இதன் பயனாக கடந்த 2011-ல் அம்மாவின் ஆட்சியின் போது 32 சதவீதமாக இருந்த உயர்கல்வி தற்போது 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் உயர் கல்வி பயில்வோர் சதவீதம் 25.8 சதவீதம் ஆகும். இதனால் தேசிய அளவில் உயர் கல்வி படிப்போரில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நடப்பாண்டில், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் திருப்பி வழங்கும் திட்டத்திற்கு ரூ. 460.25 கோடி, 10 பல்கலைக் கழகங்கள் மற்றும் 65 அரசுக் கலைக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.382 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை கல்வி முதல் தரமான கல்வி கிடைக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் தேசிய அளவில் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்து வருகிறது. பெண்களுக்கு அதிக சமுதாய பொறுப்புள்ளது. படிக்கும் பெண்கள், கல்வியுடன், சமூக அக்கறையுடன் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், சமூக நலன் காத்தல் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்போது, சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெண் குழந்தைகள் எச்சரிக்கையுடன் வாழ்ந்தால் மட்டுமே உன்னத நிலையை அடைய முடியும். பெண்களுக்கு அதிக தன்னம்பிக்கை வேண்டும். ஆண்களைவிட பெண்கள், கல்வியில் அதிக அக்கரையுடன் விளங்குகின்றனர். எனவே நல்ல சிந்தனையை ஏற்படுத்தினால் சாதிக்க முடியும்.
ஈரோட்டில் 5.5 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம்
ஈரோடு மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களை இணைத்து கடந்த மூன்றாண்டுகளில் பல திட்டப் பணிகள் முடிக்கப்பட்டும், திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு விரைவில் பணி துவங்கும் நிலையிலும் உள்ளது. அதில் ஈரோடு, அரசு ஆஸ்பத்திரி பகுதியில் ரூ. 58.54 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் காளிங்கராயன் விடுதி முதல் திண்டல் மேடு வரை மேம்பாலம் தேவை என கேட்டிருந்தனர். இப்பணிக்காக ரூ. 300 கோடி அனுமதிக்கப்பட்டு, ஆய்வுப்பணிகள் முடிந்து 5.5 கி.மீ தூரத்துக்கு பாலம் அமைக்க திட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம்- ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் ரூ. 29.90 கோடி செலவில் பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது.
ரிங் ரோடு
ஈரோடு - தொட்டிபாளையம் இடையே சாஸ்திரி நகர் பகுதியில் ரயில்வே பாதையை கடக்கும் வகையில் ரூ.10.10 கோடி செலவில் உயர் மட்ட பாலம் அமைத்து திறக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் ரூ.76.25 கோடியில் ரிங் ரோடு அமைக்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. நிலம் எடுப்பு தொடர்பாக 12 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 10 சதவீத பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டில் விரைவில் தீர்வு காணப்பட்டு பணிகள் முடிக்கப்படும். பவானியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, புறவழிச் சாலை பணி துவங்கும். மேட்டுப்பாளையம், சத்தி, கோபி, சித்தோடு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ. 270 கோடி அளவு திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணி துவங்க உள்ளது. கோபியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வு நடக்கிறது. ஈரோடு, பவானி, மேட்டூர், தொப்பூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும். பொதுப்பணித்துறை மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ. 67.76 கோடி மதிப்பில் பல்நோக்கு சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படவுள்ளது. ஜம்பை அருகில் பவானி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களுக்காக, ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. 3 அல்லது 4 மாதத்தில் மீதமுள்ள பணி முடியும். இது போன்ற பல்வேறு திட்டங்கள் இப்பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சக்தி மசாலாவின் சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் விருட்சம் திட்டம் மூலம் 75 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 17 லட்சத்து 9ஆயிரத்தை முதல்வர் வழங்கினார். விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், சிவசுப்பிரமணியம், ராஜாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாளர் கல்வி அறக்கட்டளை பொருளாளர் அருண் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.