எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இந்த அனுமதியை வழங்கியது.இந்த அனுமதி வழங்கப்பட்ட போது, மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் கமிஷன் பணம் பெற்றுக் கொண்டு, அந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட உதவியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது பற்றி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் தலைவர் இந்திராணி சி.பி.ஐ.யிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் புகார்கள் தெரிவித்து வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் முதலில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் 2 முறை காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு சிதம்பரம் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் ப.சிதம்பரம் தொடர்ந்து திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2 மாதமாக அவர் திகார் ஜெயிலில் இருக்கிறார். இன்று (17-ந்தேதி) ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிகிறது. இதனால் மீண்டும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருக்கும் அவர் விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் முறைகேடான பணப்பரிமாற்றம் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி, டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு செய்தது. அமலாக்கத்துறை விசாரணைக்காக தன்னை கைது செய்யக்கூடாது என்று சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்ட நிலையில், சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தலாம் என்று நேற்று முன்தினம் டெல்லி சிறப்பு கோர்ட்டு அறிவித்தது. தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்யலாம் என்றும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கான வசதிகளை திகார் ஜெயில் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலுக்கு நேற்று (புதன்கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு ஒன்று சென்றது. சிறப்புக் கோர்ட்டு உத்தரவுப்படி 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் மட்டும் திகார் ஜெயிலுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி பெற கை மாறிய கமிஷன் பணப்பரிமாற்றம் பற்றி ப.சிதம்பரத்திடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன.
பணப்பரிமாற்றம் குறித்து இந்திராணி முகர்ஜி கொடுத்துள்ள வாக்குமூலம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு ப.சிதம்பரம் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ப.சிதம்பரத்திடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ப.சிதம்பரத்தை கைது செய்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். எனவே சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் தங்களிடம் ஒப்படை அனுமதி கோரி, டெல்லி சிறப்புக் கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் மனு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அதை ஏற்று அமலாக்கத்துறையினரிடம் சிதம்பரம் ஒப்படைக்கப்படுவார். இத்தகைய சட்ட நடைமுறைகளால் சிதம்பரம் இந்த வழக்கின் பிடியில் இருந்து எப்போது விடுபடுவார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.