எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதாவின் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. 288 இடங்களைக் கொண்ட மகராஷ்டிராவில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் 90 இடங்களை கொண்ட அரியானாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்தை பெற முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பா.ஜனதா கடந்த முறை 47 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் தற்போது 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாரதிய ஜனதாவால் இந்த முறை எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது. அரியானாவில் கடந்த முறை 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் இந்த தடவை 31 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவுக்கு வலுவான சவாலை கொடுத்துள்ளது. அதுபோல தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்திய தேசிய லோக் தளம் 1, அரியானா லோக் கித் கட்சி 1 மற்றும் 7 சுயேட்சைகள் ஆகிய 9 பேர் வெற்றி பெற்றதால் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. என்றாலும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை பாரதிய ஜனதா தற்போது தொடங்கி விட்டது.
அரியானாவில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தும் முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை அமித்ஷாவிடம் பா.ஜனதா பாராளுமன்ற குழு ஏற்கனவே வழங்கி இருந்தது. இதனால் அரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நிலையிலேயே சுயேட்சைகளின் ஆதரவை பெற அமித்ஷா உத்தரவிட்டார். அதோடு அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரையும் டெல்லிக்கு அழைத்து சில யோசனைகளை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரியானாவில் வெற்றி பெற்றுள்ள 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் லோக் தளம், அரியானா லோக்கித் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என 9 எம்.எல்ஏ.க்களின் ஆதரவை திரட்டும் அதிரடி நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா ஈடுபட்டது. பாரதிய ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்கள் குழுக்களாக பிரிந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தங்கள் பக்கம் இழுத்தனர்.
பா.ஜனதா தலைவர்களின் பேச்சுவார்த்தையால் கட்டார் தலைமையில் ஆட்சி அமைக்க சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நயன்பால் ரவத், ரஞ்சித்சிங், சோம்வீர் சங்வான், பால்ராஜ் குண்டு ஆகிய 4 பேரும் உடனடியாக சம்மதித்தனர். இவர்கள் 4 பேரும் பாரதிய ஜனதாவில் இருந்தவர்கள். தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் இந்த 4 பேரையும் தங்கள் பக்கம் வளைப்பதற்கு பா.ஜ.க. தலைவர்களால் மிக எளிதாகி விட்டது. அதுபோல மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராகேஷ் தவுதாபாத் என்பவரையும் பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இந்த 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே தேவிலாலின் இளைய மகனும், லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரஞ்சித்சிங்கிடமும் பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அதுபோல அரியானா லோக்கித் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கோபால் கண்ட் என்பவரிடமும் பா.ஜக. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அவர்கள் இருவரும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தனர்.
அவர்களை சிர்சா பாராளுமன்ற எம்.பி. சுனிதா தனி விமானத்தில் நேற்று டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ரஞ்சித்சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். காங்கிரஸ் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் காங்கிரஸ் பக்கம் செல்ல விரும்பாத அவர் உடனடியாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதற்கிடையே மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.