முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடையில் வெப்ப அளவு எப்படி இருக்கப் போகிறது? இந்திய வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் வரும் கோடைக்காலத்தில் வெப்ப அளவானது வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் முதல் மே வரை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது,

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் வடமேற்கு, மேற்கு, மத்திய பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலையானது வழக்கமான அளவை விட சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலை அல்லது சராசரியான வெப்பநிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகியவை வடமேற்கு மாநிலங்களாகும். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவை மத்திய இந்தியாவைச் சேர்ந்தவை. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மேற்கு இந்தியப் பகுதிகளில் அடங்கும். டெல்லி, ஜம்மு காஷ்மீர், அரியானா, சண்டிகர், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகள், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், சவுராஷ்டிரம், குஜராத்தின் கட்ச் பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரம்,  விதர்பா, கர்நாடகாவின் கடலோர மற்றும் உள் பகுதிகள், கேரளம் ஆகியவற்றில் வழக்கமான வெப்பநிலையை விட பகல் நேரத்தில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்து காணப்படும். இவ்வாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து