முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி: 2021 தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றி பெற களப்பணி ஆற்றுவோம் அமைச்சர் ஆர் பி உதயகுமார் : அம்மா பேரவை சூளுரை ஏற்று தீர்மானம்

சனிக்கிழமை, 23 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அம்மாவின் வழியில் அ.தி.மு.க ஆட்சி இன்னும் 100 ஆண்டுகள் ஆள பொற்கால ஆட்சியை நடத்திவரும் முதல்வர், துணை முதல்வருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்தும் மற்றும் வருகின்ற 2021 தேர்தலில் கழகத்திற்கு மகத்தான தொடர் வெற்றி பெற 5 ஆண்டுத் தொடக்க நன் நாளில் அயராது களப்பணி ஆற்றுவோம் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற அம்மா பேரவை நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் சூளுரை ஏற்று தீர்மானம் நிறைவேற்றபட்டது. 

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டியில் கழக அம்மா பேரவை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் கழக அம்மா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர் .பி. உதயகுமார் தலைமை தாங்கி நிவாரண பொருட்களை வழங்கி கீழ்க்கண்ட தீர்மானங்களை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிறைவேற்றியது மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று, மக்களுக்காக தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த, தமிழர் குலசாமி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, தொடர் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்த வரலாற்று சிறப்புமிக்க பொன்னான நன்னாளில் நான்காண்டு நிறைவுற்று ஐந்தாம் ஆண்டு தொடங்குகிற நன்னாள் இந்நாள். மனிதப் புனிதர் புரட்சித்தலைவரால்உருவாக்கப்பட்ட ,இந்த மாபெரும் புனித இயக்கத்தை,இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி கழகத்திற்கு மாபெரும் அழியாப் புகழைப் பெற்றுத் தந்த புரட்சித்தலைவி அம்மா, வரலாற்று சிறப்புமிக்க சட்டப்பேரவையில் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தனது லட்சியத்தை முழக்கமிட்டார் அம்மாவின் தீர்க்கதரிசனத்துடன், முழக்கமுட்ட அந்த வார்த்தைகளை தங்களின் வேத வாக்காக எண்ணி, அம்மாவின் பாத தடத்தில் அடிபிறழாமல், உலக நாடுகளே பின்பற்றும் வகையில் ஒரு சத்தம் இல்லாமல் சரித்திரம் போற்றும் சாதனை மிகுந்த ஆட்சியை, தமிழகத்தில் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், கழக இணைச் ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் சிறப்பாகநடத்திவருகிறார், அவருக்கு உறுதுணையாக பாண்டிநாட்டு பண்பாளர், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இருக்கிறார் என்பதை எட்டரை கோடி மக்களும் நன்கு அறிந்து அம்மாவின் அரசைப் பாராட்டி வருகின்றனர் 

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரியை உருவாக்கியும், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உருவாக்கியும், தமிழகத்தில் புதிய தொழில் புரட்சியை உருவாக்கி அதன் மூலம் 11லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வண்ணம் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று 8,835 கோடி அளவில் தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்தும், தமிழகத்தில் அனைத்து குடும்பங்களும் தித்திக்கும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில்1000 ரூபாய் பொங்கல் பரிசுடன் பொங்கல் தொகுப்புகளையும் வழங்கியும், தமிழகத்தில் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு, காவிரி போன்றவற்றை அம்மாவின் வழியில் மீட்டெடுத்தும், இந்தியாவிலே நல் ஆளுமை பெற்ற மாநிலமாக தமிழகத்தை முதலிடம் பெற வைத்து மத்திய அரசால் விருது பெற வைத்தும், 11,250 கோடியில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசு படுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவிரி திட்டமும், இதுபோன்ற பல்வேறு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை எல்லாம் இந்த நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி மாபெரும் சகாப்தம் படைத்தது மட்டுமல்லாதுஉலக நாடுகளை அச்சுறுத்தும் இந்த கொரோனா வைரஸ் நோயிலிருந்து, மக்களைக் காக்க இரவு ;பகல் பாராது அயராது மக்கள் பணியாற்றி, இதன் மூலம் தமிழக மக்களை காத்து இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் தமிழகம் திகழ்கின்ற என்ற மத்திய அரசின் பாராட்டைப் பெற்று மட்டுமல்லாது இதுபோன்ற எந்த இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் மக்களை காக்கும் புனித பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டும், முடக்கப்பட்ட சின்னத்தை மீட்டெடுத்து, அம்மாவின் வழியில் ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் கனவை நனவாக்கி, ஒரு இமாலய வரலாறு சிறப்பு மிக்க பொற்கால ஆட்சியை நடத்திவரும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், அண்ணன் எடப்பாடி அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாட்டு பண்பாளர், கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், கழக அம்மா பேரவை பொற்பாதம் பணிந்து, வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக செலுத்துகிறோம்.

இந்த ஐந்தாம் ஆண்டு தொடக்கும் நன்னாளில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில், கழகத்திற்கு மாபெரும் வெற்றி வாகை சூட, கழக அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து, எதிர்க்கட்சிகள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கச் செய்து, தொடர்ந்து அம்மாவின் அரசு மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தது என்ற, கழகத்திற்கு அழியாப் புகழை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கும் வரை, இரவு ,பகல் பாராது அயராது களப்பணி ஆற்றுவோம் என்று கழக அம்மா பேரவை இன் நன்னாளில் சூளுரை ஏற்கிறது 

இதில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா வெற்றிவேல் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் எஸ் சரவணன் எம்எல்ஏ, மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே தமிழரசன், மற்றும் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி ,மகாலிங்கம், நகர செயலாளர் விஜயன்,முன்னாள் சேர்மன் தமிழழகன், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்ரமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் டாக்டர் பாவடியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து