எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கைது செய்யப்பட்ட கார் பந்தய வீரர் பெயர் பாலவிஜய் (வயது 35). சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பாலசுப்பிரமணி சென்னை தலைமைச்செயலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோடீஸ்வரர். பெற்றோருக்கு ஒரே பிள்ளையான பாலவிஜய் பிரபலமான தேசிய கார் பந்தயவீரர். 7 முறை தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.
சர்வதேச கார் பந்தயத்தில் பங்கு பெறும் தகுதியை பெற்றவர். பி.காம்.பட்டதாரி. கார் பந்தயத்தில் வெறி பிடித்து, அதில் வெற்றி பெற தனது கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தவர். கார் பந்தய வெறியில் திருமணம் கூட செய்து கொள்ளாதவர்.
தன்னைப்போல நிறைய வீரர்களை கார் பந்தயத்தில் பங்கு பெறச் செய்தவர். இப்படி கார் பந்தயத்தில் வெற்றிக்கொடிகளை நாட்டி வந்த பாலவிஜய் தற்போது ரூ.4 கோடி மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து, அதில் இருந்து மீள்வதற்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 5 வங்கிகளில் தனது நண்பர்கள் நீலாங்கரையைச் சேர்ந்த முகமது முசாமில்(34), அய்யாத்துரை(32) ஆகியோருடன் சேர்ந்து போலி வருமான வரிச் சான்றிதழ்களை மேற்படி வங்கிகளில் சமர்ப்பித்து, சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கடன் வாங்கி 8 சொகுசு கார்களை வாங்கியுள்ளார்.
போலியான முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை கொடுத்து வங்கி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர். பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களை விற்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் அந்த கார்களை விற்க முடியவில்லை. வங்கி கடனை திருப்பி செலுத்தாததால், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
கார்பந்தய வீரர் பாலவிஜய் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர்கள் அய்யாத்துரை, முகமது முசாமில் ஆகியோரும் கைதானார்கள். அவர்களிடம் இருந்து 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட கார்பந்தய வீரர் பாலவிஜய் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 6 கார்களையும், குறிப்பிட்ட வங்கி நிர்வாகத்தினரிடம் போலீசார் ஒப்படைத்து விட்டனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது பற்றியும் விசாரணை நடக்கிறது.
மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் தந்தை தற்கொலை
கார் பந்தய வீரர் பாலவிஜய் மோசடி வழக்கில் சிக்கியதை அறிந்த அவரது தந்தையான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாலசுப்பிரமணி தற்கொலை மூலம் உயிரை விட்டு விட்டார் என்ற பரிதாபமான தகவலை போலீசார் தெரிவித்தனர். சர்வதேச அளவில் புகழ் பெற வேண்டிய தனது மகன், மோசடி வழக்கில் சிறைக்குப்போவதை பார்க்க முடியாமல், மனம் உடைந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பே அவர் தற்கொலை செய்து விட்டதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டிய பாலவிஜய் தனிப்பட்ட முறையில் குடிப்பழக்கம், பெண்கள் தொடர்பு போன்ற தவறான பழக்கமும் இல்லாதவர். தனது மோசமான செயல்பாடுகளால், இன்றைக்கு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார். தவறான நண்பர்கள் சேர்க்கையால், பாலவிஜய் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக போலீசார் கூறினார்கள்.
புகழ் மிக்க தனது மகன் ஜெயிலுக்கு போய் விட்டான், தனது கணவரும் இறந்துபோன நிலையில், பாலவிஜயின் தாயார் தனிமையில், ஒரு வாடகை வீட்டில் சென்னையை அடுத்த கோவளத்தில் மிகுந்த சோகத்தில் வாழ்வதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.