முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். இதே போல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 சதவீதமாக நீடிக்கும். வட்டி விகிதத்தை மாற்றாமல் நீடிக்க, நிதிக்கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர்.  

2021-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும். வருங்காலங்களில் நகர்ப்புறங்களில் தேவை அதிகரிக்கும், கிராமங்களிலும் தேவை அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவீதமாகவும்,  நான்காம் காலாண்டுக்கு 0.7 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

ரெப்போ விகிதம் மாற்றப்படாததால் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காது. இது, பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து