எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : ஐ.பி.எல் தொடரின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. மில்லர், கிறிஸ் மோரிஸ் பங்களிப்பு அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
ஐ.பி.எல் தொடரின் 7-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரீத்திவ் ஷா, ஷிகார் தவன் களமிறங்கினார்கள். சி.எஸ்.கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். டெல்லி அணியில் மற்ற வீரர்கள் சொதப்பினாலும் கேப்டன் ரிஷப் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடி 51 ரன்கள் சேர்த்தார்.
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் உனட்கட் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் டெல்லி வீரர்கள்.
ராஜஸ்தான் அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் கொடுத்தார். 17-வது ஓவரை வோக்ஸ் வீச, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிக்ஸர் அடித்தார் உனத்கட். அப்போது ஆட்டத்தில் பரபரப்பு ஏறியது. 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன. பந்த் அப்போது ஒரு ரன் அவுட்டை தவறவிட்டார். ஆனால் அது தான் அவர் போட்டியை தவறவிட்ட முக்கிய தருணம் என்பதை அவர் அப்போது உணரவில்லை.
ஆட்டத்தின் 19-வது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரபாடா ஓவரில் முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறும் சூழலில் இரு சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் மோரிஸ். இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை. பதற்றப்படாமல் இரு பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார் மோரிஸ். இதனை அடுத்து ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக 4-வது லீக் ஆட்டத்தின்போது ஒரு இமாலய ரன் சேஸிங்கில் கடைசி பந்துவரை போராடி பஞ்சாப்பிடம் கோட்டை விட்ட ராஜஸ்தான் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவிக்கையில்., இந்த ஆட்டத்தில் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், ஆட்டத்தின் பிற்பகுதியில் பனித்துளி முக்கிய பங்கு வகித்தது என்றார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சுசாம்சன் தெரிவிக்கையில்., பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தான் எடுத்திருந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அதே போட்டியை இன்னும் 100 முறை விளையாடினாலும், சிங்கிள் ரன் எடுக்க ஓடி இருக்க மாட்டேன் என சஞ்சுசாம்சன் தெரிவித்தார்.
முன்னதாக பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி, நான்கு ரன்கள் எடுத்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்லும் எனும் நிலையில், இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் பிடிவாதமாக ஒற்றை ரன் ஓடுவதற்கு மறுத்திருந்தார் சஞ்சுசாம்சன். அப்போது எதிர் முனையில் நின்றிருந்த கிறிஸ் மோரிஸ் முகத்தில் புன்னகை தவழவில்லை. கடைசி பந்தில் சாம்சன் அவுட் ஆக, நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது நினைவிருக்கலாம்.
அதிக தொகைக்கு ஏலம்
ஐ.பி.எல் வரலாற்றிலே அதிக தொகைக்கு ஏலம் போனவர் எனும் பெருமையை சமீபத்தில் பெற்றார் கிறிஸ் மோரிஸ். அவரை 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் மோரிஸ்.
5-ம் இடத்துக்கு முன்னேற்றம்
3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் திங்கள்கிழமை சந்திக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
06 May 2024புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது.