எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது இன்னிங்சில் பும்ரா 3 விக்கெட்களையும், முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
181 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
209 ரன்கள்...
இந்த நிலையில் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த ரிஷாப் பண்ட் 22 ரன்னில் வேகப்பந்து வீச்சாளர் ராபின்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இஷாந்த் ஷர்மாவும் (16 ரன்) அவரது பந்து வீச்சுக்கே வீழ்ந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட்டுக்கு 209 ரன்களுடன் சிக்கலில் தவித்தது. இங்கிலாந்தின் கை சற்று ஓங்கியது போல் தெரிந்தது.
ஷமி - பும்ரா அசத்தல்...
இந்த சூழலில் 9-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த முகமது ஷமியும், ஜஸ்பிரித் பும்ராவும் இங்கிலாந்தின் உற்சாகத்தை சீர்குலைத்தனர். இருவரும் கைதேர்ந்த பேட்ஸ்மேன்கள் போன்று விளையாடி வியக்க வைத்தனர்.
பவுன்சர் பந்து...
பும்ராவுக்கு, தொடக்கத்தில் அடுக்கடுக்கான பவுன்சர் பந்துகளை வீசி இங்கிலாந்த பவுலர்கள் குடைச்சல் கொடுத்தனர். இதில் மார்க்வுட் வீசிய ஒரு பந்து அவரது ஹெல்மெட்டை பயங்கரமாக தாக்கியது. உடனடியாக அணியின் பிசியோதெரபிஸ்ட் வந்து அவரை சோதித்து பார்த்தார். காயம் எதுவும் இல்லை என்று கூறியதையடுத்து தொடர்ந்து பேட்டிங் செய்தார்.
2-வது அரைசதம்...
இன்னொரு முறை ஆண்டர்சன் வீசிய பந்தும் அவரது ஹெல்மெட்டை பதம் பார்த்தது. மறுமுனையில் முகமது ஷமி, சிரமமின்றி இங்கிலாந்தின் பந்து வீச்சை வறுத்தெடுத்தார். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் நொந்தே போனார்கள். ஷமி தனது 2-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா டிக்ளேர்...
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய அணி 2-வது இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. முகமது ஷமி 56 ரன்களுடனும் (70 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களுடனும் (64 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.
272 ரன்கள் இலக்கு...
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்வதற்கு குறைந்தது 60 ஓவர்கள் தாக்குப்பிடித்தாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது.
டக்-அவுட்...
தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் (0), டாம் சிப்லி (0) இருவரும் இந்திய வேக தாக்குதலில் டக்-அவுட் ஆனார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஒன்றில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் ரன் இன்றி சரண் அடைந்தது இதுவே முதல் முறையாகும். தொடர்ந்து 4 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஹசீப் ஹமீத் 9 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 2 ரன்னிலும் வெளியேற்றப்பட்டார்.
ஜோ ரூட் அவுட்...
முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அபாயகரமான பேட்ஸ்மேன் கேப்டன் ஜோ ரூட்டை (33 ரன், 60 பந்து, 5 பவுண்டரி) இந்த முறை பும்ரா வேட்டையாடினார். அவரது பந்து வீச்சில் ஜோ ரூட் ஸ்லிப்பில் கோலிடம் பிடிபட்டார். இதனால் இந்தியாவின் பிடி மேலும் இறுகியது.
மொயீன் அலி - சாம்...
விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டியது. 2 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த மிக எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற கோலி வீணடித்து விட்டார். அதன் பிறகு அவர் தான் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக மாறினார். அவர் ஒரு பக்கம் போராட மறுமுனையில் மொயீன் அலி 13 ரன்னிலும், சாம் கார்ரன் ரன்இன்றியும் நடையை கட்டினார்.
பும்ரா - சிராஜ்...
ராபின்சன் 9 ரன்னில் (35 பந்து) பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.ஆர்.எஸ்.-ன்படி கோலி அப்பீல் செய்தே சாதகமான முடிவை பெற்றார். தொடர்ந்து ஜோஸ்பட்லர் 25 ரன்களிலும் (96 பந்து, 3 பவுண்டரி), ஆண்டர்சன் ரன்இன்றியும் முகமது சிராஜியின் பந்துவீச்சுக்கு இரையானார்கள்.
இந்தியா வெற்றி...
முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 51.5 ஓவர்களில் 120 ரன்னில் சுருண்டது. இன்னும் அரைமணி நேரம் தாக்குப்பிடித்து இருந்தால் ஆட்டம் டிராவில் முடிந்திருக்கும். இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தியா முன்னிலை...
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட் வருகிற 25-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.
முதல் இன்னிங்ஸ்
1) ராகுல் - 129. 2) ரோஹித் - 83. 3) கோலி - 42. 4) ஜடேஜா - 40.
இஷாந்த் சர்மா - 3 விக்கெட்டுகள், ஷமி - 2 விக்கெட்டுகள், சிராஜ் - 4 விக்கெட்டுகள், ஜடேஜா - 1 ரன் அவுட்
2-வது இன்னிங்ஸ்
1) புஜாரா - 45, 2) ரஹானே - 61, 3) ஷமி - 56* , 4) பும்ரா - 34*.
பும்ரா - 3 விக்கெட்டுகள், சிராஜ் - 4 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா - 2 விக்கெட்டுகள்,
இரு இன்னிங்ஸிலும்....
1) ரிஷப் பந்த் = 4 டிஸ்மிஸல்கள், இஷாந்த் சர்மா - 5 விக்கெட்டுகள், சிராஜ் - 8 விக்கெட்டுகள்.
இந்தியா 3-வது வெற்றி
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. 1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையி்லான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும். மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 10-வது இந்திய வீரர் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் டெஸ்ட் - முக்கிய நிகழ்வுகள்
1) 1986-ல் கபில் தலைமையிலும் 2014-ல் தோனி தலைமையிலும் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அங்குக் கிடைத்த 3-வது வெற்றி இது. வெளிநாடுகளில் மெல்போர்னில் இந்திய அணி அதிகபட்சமாக 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
2) இந்த டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். (ஒரு விக்கெட் ரன் அவுட்டில் கிடைத்தது). 2018-ல் ஜொஹன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இதற்கு முன்பு டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
3) முதல் இன்னிங்ஸில் பும்ராவும் ஷமியும் டக் அவுட் ஆனார்கள். 2-வது இன்னிங்ஸில் தங்களுடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களை (ஷமி - 59*, பும்ரா 29*) எடுத்துள்ளார்கள்.
4) இந்த டெஸ்டில் தனது 22-வது சதத்தை அடித்தார் கேப்டன் ரூட். இதற்கு முன்பு அவர் சதமடித்தபோது இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததில்லை. முதல்முறையாக சதமடித்தும் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் ரூட். (கிரீம் ஸ்மித் 27 சதங்கள் அடித்தும் தோல்வியை எதிர்கொள்ளவில்லை.)
5) 2014-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஷமியும் புவனேஸ்வர் குமாரும் 10-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தார்கள். அதன்பிறகு 9-வது விக்கெட் மற்றும் 10-வது விக்கெட்டுக்கு இப்போதுதான் இந்திய அணி இந்தளவுக்கு அதிக ரன்களை எடுத்துள்ளது.
6) ரூட்டின் விக்கெட்டை 5 முறை வீழ்த்தியுள்ளார் பும்ரா. பேட் கம்மின்ஸூம் பும்ரா பந்துவீச்சில் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். டெஸ்டுகளில் பும்ராவின் 379 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்கள் எடுத்து 5 முறை வீழ்ந்துள்ளார் ரூட்.
7) லார்ட்ஸ் டெஸ்டில் 7 முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். டெஸ்டில் இங்கிலாந்து அணியினர் எடுத்த அதிகபட்ச டக் அவுட்களை இது சமன் செய்துள்ளது. கடைசியாக 1999-ல் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது.
8) தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2001 கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி ஆஸி.யின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது. 2016 சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய அணி கடைசி நாளின் கடைசிப் பகுதியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வென்றது.
9) லார்ட்ஸில் இந்தியப் பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு இது. சிராஜுக்குக் கிடைத்த பெருமை. இதற்கு முன்பு கபில் தேவ் 1982-ல் 168 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
10) சொந்த மண்ணில் 4-வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த குறைந்தபட்ச ரன்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.