முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி செலுத்தி கொண்டால் ஒமைக்ரான் போல வேறு தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்கலாம் : புதுவை கவர்னர் தமிழிசை நம்பிக்கை

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஒமைக்கரான் போன்று வேறு தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரி அடுத்த திருக்கனூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நல்லாட்சி தின விழாவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் ஆளுநர் தமிழிசை பேசுகையில், 

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வந்திருப்பது எனக்கு கிடைத்த வாய்ப்பு. தமிழ் தெரிந்திருப்பதால் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக புரிந்து கொள்ள முடிகிறது. ஜனவரி மாதம் வீடுவீடாக வந்து தடுப்பூசி செலுத்துவோம் என்று உள்துறை அமைச்சர் கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டால் பாதுகாப்பாக இருக்க முடியும்.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒமைக்கரான் போன்று வேறு தொற்று வந்தாலும் பாதுகாப்பாக இருக்க முடியும். பிரதமர் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறார். பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்  என்று ஆளுநர் தமிழசை பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து