எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ஏப்.21 - ஐ.பி.எல். போட்டியில் எளிமையான இலக்கை சாதாரணமாக கையாண்ட மும்பை இந்தியன்ஸ் இறுதியில் கடைசி பந்தில் புனே அணியை வென்றது.ஐ.பி.எல். போட்டி தொடரின் 21-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இரண்டு அணிகளுமே சமபலம் கொண்டவையாக கணிக்கப்பட்டு இருந்ததால் ரசிகர்கள் இடையே கடும் எதிர்பார்ப்பு நிலவியது. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் கேப்டன் யுவராஜ் சிங் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் பைனே ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. புனே அணி 16 ரன்களை எடுத்திருந்தபோது அதிரடி வீரர் ஜெஸ்ஸி ரைடர் 12 ரன்கள் எடுத்த நிலையில் அஹமதின் பந்துவீச்சில் சச்சினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து மன்ஹாஸ் களமிறங்கினார். மன்ஹாஸ் ரன் எதுவும் எடுக்காத நிலையில் அஹமதின் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரே ஓவரில் புனே அணி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக ராபின் உத்தப்பா களமிறங்கினார். அடுத்த ஓவரை முனாப் பட்டேல் வீசினார். இவரது பந்தில் பீட் ஆன பைனே கிளீன் போல்டு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது புனே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் களமிறங்கிய அணியின் கேப்டன் யுவராஜ் சரிவை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் முனாப் பட்டேலின் அதே ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட் கீப்பர் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 4 வது மற்றும் 5 வது ஓவர்களில் புனே அணி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் மிஸ்ரா, உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 8.3 ஓவர்களில் 52 ஆக இருந்தபோது 12 ரன்களை எடுத்திருந்த மிஸ்ரா, மொர்டாசாவின் பந்தில் சர்மா கேட்ச் பிடிக்க அவுட்டானார். அடுத்து முரளி கார்த்திக், உத்தப்பா ஜோடி சேர்ந்து ரன் எண்ணிக்கையை நகர்த்திக்கொண்டு சென்றது. 87 ரன்களை புனே அணி தொட்டபோது, 11 ரன்களை எடுத்திருந்த கார்த்திக், மலிங்காவின் பந்தில் சைமண்ட்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணி 98 ரன்களை அடைந்தபோது அதுவரை தாக்குப்பிடித்து 45 ரன்களை அடித்த உத்தப்பா, மொர்டாசாவின் பந்தில் பொல்லார்டு பிடித்த ஒரு அற்புதமான டைவிங் கேட்சால் அவுட்டாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் புனே அணியின் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் முனாப் பட்டேல் மிக சிக்கனமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும், அஹமது, மொர்டாசா, மலிங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரான்ங்ளின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ். துவக்க ஆட்டக்காரர்களாக பிரான்க்ளின் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் பிரான்க்ளின் 6 ரன்களே எடுத்த நிலையில் வாஹ் பந்தில் மன்ஹாசால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து அம்பதி ராயுடு துவக்க வீரர் சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் மிக நிதானமாக ரன்களை சேர்த்தனர். இவர்களின் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிக்கு அருகாமையில் கொண்டுசென்றது. இந்நிலையில் அணியின் எண்ணிக்கை 83 ஐ எட்டியபோது 35 ரன்களை எடுத்திருந்த சச்சின், சர்மாவின் பந்தில் தாமசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக ரோகித் சர்மா களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 89 க்கு சென்றபோது அம்பதி ராயுடுவும் 37 ரன்கள் எடுத்த நிலையில் தாமசின் பந்தில் சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து அதிரடி வீரர் சைமண்ட்ஸ், சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதனால் வெற்றி இலக்கை நெருங்கியது மும்பை இந்தியன்ஸ். இறுதி ஓவர் பரபரப்பான நிலையை எட்டியது. அந்த ஓவரை முரளி கார்த்திக் வீசினார். இந்த ஓவரில் கடைசி 2 பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஓடினர். கார்த்திக் பந்தை சரியாக சேகரிக்காமல் விட்டதால் அந்த ரன் எடுக்கப்பட்டது. ரன் அவுட் ஆகாமல் சைமண்ட்ஸ் தப்பினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 118 ரன்களை எடுத்தது. கடைசி பந்தை சந்தித்த ரோகித் சர்மா அந்த பந்தை சிக்ஸருக்கு தூக்கினார். இதனால் கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மும்பை தரப்பில் சைமண்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 16 ரன்களையும், சர்மா 20 ரன்களையும் பெற்றனர். புனே தரப்பில் தாமஸ், வாஹ், சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை வீரர் முனாப் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் 3 ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.