முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு சுங்க கட்டண சலுகை : மகராஷ்டிர அரசு அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
Ganesha-Chaturthi 2022 08-2

Source: provided

மும்பை : விநாயகர் சதுர்த்திக்கு கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு செல்வோருக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மகராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மகராஷ்டிர மாநில போக்குவரத்து ஆணையர் அவினாஷ் தக்னே கூறியதாவது, 

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 9-ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இப்பண்டிகை காலத்தில் மும்பை மற்றும் புனேவில் இருந்து கொங்கன் பகுதிக்கு ஏராளமானோர் சென்று வருவது வழக்கமாக உள்ளது. 

இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எடுத்த முடிவின்படி கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு செல்வோருக்கு செப்டம்பர் 11 வரை வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான பாஸ்களை ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.  

மேலும் வாகனப் பதிவு எண், செல்லும் வழி, சொந்த ஊரில் தங்கப்போகும் கால அளவு உள்ளிட்ட விவரங்களை அளித்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் அளித்து இலவச பாஸ்களை பெறலாம் என கூடுதல் போக்குவரத்து ஆணையர் ஜே.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து