எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் புதன்கிழமை துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி சுமார் 8 பேர் பலியாகினர். பலர் காணாமல் போயிருப்ப்தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த துர்கா பூஜை புதன்கிழமை நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து துர்கா தேவி சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன. மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள மால் நதியில் துர்கா தேவி சிலைகளைக் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூழ்கி நான்கு பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணாமல் போயிருக்கின்றனர்.
இந்தவிபத்து குறித்து மாவட்ட நீதிபதி மவுமிதா கோடரா கூறுகையில், துர்கா தேவி சிலைகளை கரைப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் நூற்றுக்கணக்கானோர் நதிகரைகளில் கூடியுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சின்னசின்ன காயங்களுடன் மீட்கப்பட்ட 13 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய, மாநில பேரிடர் மீட்பு படைகள், உள்ளூர் போலீஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், மால் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான புலு சிக் பராய்க், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மீட்பு பணிகளை பார்வையிட விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என கவலை தெரிவித்துள்ள அமைச்சர் விபத்துக்குறித்து கூறும்போது, "அந்த துயரச்சம்பவம் நடக்கும் போது நான் அங்கு தான் இருந்தேன்.அப்போது அங்கு நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரோட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. பலர் காணாமல் போயிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
விபத்துகுறித்து பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து கேள்விப்பட்டு பிரதமர் மிகவும் வேதனை அடைந்ததாகவும், விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கள்களைத் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநில எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில்,"ஜல்பைய்குரியில் நடந்த துர்கா பூஜையில் ஏற்பட்ட விபத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக வேதனையான தகவல்கள் வருகின்றன. சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி மற்றும் மாநில நிர்வாகமும் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் துர்கா தேவி சிலையை கரைக்கும் போது, ஆக்ரா நதியில் மூழ்கி, 15 வயது சிறுவன், 19 மற்றும் 22 வயதுடைய வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் இதேபோன்ற துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு மழைநீர் தேங்கியிருந்த பள்ளம் ஒன்றில் துர்கா தேவி சிலையினை கரைக்கும் போது, நீரில் மூழ்கி ஆறுபேர் உயிரிழந்தனர். ஆறுபேர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.